3.9.16

முகநூலில் பதிவனவற்றை அச்சுநூல்கள் ஆக்கிவரும் நண்பர் இரா. நாறும்பூநாதன்

முகநூல்/முகப்புத்தகம்/Facebook -இல் நீடிப்பதோ, உட்புகுவதோ வீண் என்னும் நண்பர் கவனத்துக்கு இச்சேதியைக் கொண்டு வந்துள்ளேன். இரா. நாறும்பூநாதன் என்னும் முகநூல் நண்பர், (முகப்புத்தகம் என்று முகநூலை முதலிலிருந்தே சொல்லிவருபவர்) - தான் முகநூலில் பதிவனவற்றைப் புத்தகங்களாக்கி வருபவர். விற்பனையும் குறைவில்லாமல் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சான்றாக, இந்த நூல். இதன் அட்டைப்படமும் ஓர் அழிவிலாக் கோயிற்படம்தான். கழுகுமலைக் கோயில். ஓவியர் ஈசுவரமூர்த்தியால் வரையப்பெற்றது. டெம்மி அரைக்கால் அளவுள்ள பக்கங்கள் 286 கொண்டது. இந்தப் புத்தகத்தை அவர் கி.ரா. ஐயாவுக்கு அனுப்ப, அவர் தம் வழமைப்படி,குங்குமச் சிவப்பு நிறமெழுதும் தூவலால் குறித்து வாசித்தபின், முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்குக் கொடுக்க, அவர் தன் வழமைப்படி(நாயகர், எந்தப் புத்தகமானாலும் எங்களைப் போல் அடிக்கோடுகளோ குறியீடுகளோ பதிக்காமல், தூய்மையாகப் படித்துத் தருவார்)வாசித்துமுடித்து எனக்குத் தந்தார். தான் வாங்கும் எண்ணற்ற நூல்களில், தன் பெயரையும் எழுதி உடைமையாக்கிக்கொள்ள மாட்டார் அருள் (எ) நாயகர். மாறுபட்ட மனமுடையவர்களின் உலகத்தில் வேறுபட்டுத் தன்னியல்பாக வாழ்பவர்களோடு பழகுமாறு விதிக்கப்பெற்றுள்ளவன் அடியேன்.இவ்வாறு, மூன்றாவது கையாக, இந்த நூல் என்னை வந்தடைந்தது. எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல, இத்திறத்தனதாம். இது எனக்கும் ஆகவும் உடன்பாடே. நண்பர்களுடன் பகிர்ந்து வாசிப்பதே மனநிறைவுதான். தன்னந்தனியாக, ஒருமுறையும் புரட்டிவாசிக்கப்பெறாத புத்தம் புதிய புத்தகங்கள், அடங்காக்குமைச்சலுடன் நிலைப்பேழைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் நூலகமெல்லாம் நூலகமா? - தேவமைந்தன்


14.5.16

வியத்தலும் இலமே

"தங்களுக்கு இயல்பாகவும், பயிற்சி + முயற்சிகள் மூலமும் வாய்த்துள்ள தகுதியால் 'பெரியவர்கள் ஆனவர்களை' வியந்து பொறாமைப்படவோ, போற்றவோ நாங்கள் செய்வதில்லையே. அவ்வாறு, இயற்கையாகவே நல் வாய்ப்பைப் பெறாதவர்களாகப் பிறந்து வாழ நேர்வதால் ~~இயல்பை மீறி தங்களுக்கு அமைத்துக் கொண்ட வாய்ப்புக்களால் 'வென்றவர்கள்' வல்லாண்மை செய்யும் இந்தச் சமூகத்தால், 'சிறியவர்கள்' என்று முத்திரை குத்தப்படுபவர்களை இகழ்வது என்பதைச் செய்ய நினைக்கக் கூட மாட்டோம் :)"

- சங்ககாலப் பாவலர் கணியன் பூங்குன்றனார்

18.4.16

Thanks to BBC Tamil


tag:www.bbctamil.com,2016-02-21:/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
2016-02-21T15:56:59+00:00
2016-02-21T15:31:51+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி 5
இலங்கையின் பாடல்கள், இசைவடிவங்கள் குறித்து ஆராயும் எமது ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் ஐந்தாவது பகுதியில் தாலாட்டு மற்றும் ஒப்பாரி பாடல்கள் குறித்து ஆராய்கிறோம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 5





tag:www.bbctamil.com,2016-02-13:/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
2016-02-14T16:55:52+00:00
2016-02-13T14:26:14+00:00


ஈழத்துப்பாடல்கள் - பகுதி 4
இலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 4





tag:www.bbctamil.com,2016-02-07:/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
2016-02-07T16:23:52+00:00
2016-02-07T15:31:43+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி - 3
ஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 3





tag:www.bbctamil.com,2016-01-31:/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
2016-01-31T15:41:44+00:00
2016-01-31T15:39:24+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு
இலங்கையின் பாடல்கள் குறித்த இந்த தொடரின் இந்த பகுதியில் அங்குள்ள சடங்குப்பாடல்கள் குறித்து பேசப்படுகின்றது.



ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு





tag:www.bbctamil.com,2016-01-24:/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
2016-01-24T13:28:12+00:00
2016-01-24T12:46:06+00:00


ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று
இலங்கை தமிழர்களின் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறித்த தொடரின் முதல் பகுதி.



ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று





உருப்பட மாட்டாயடா தமிழா! - ம. இலெ. தங்கப்பா

உருப்பட மாட்டாயடா, தமிழா!
உருப்பட மாட்டாயடா!குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்திடும்
கொள்கையும் உணர்வும் உனக்கு வருமட்டும்
( உருப்பட......)ஐந்து மணிஎன அழைப்பில் முழங்குவாய்;
ஆறரைக் கேஅந்தக் கூட்டம் தொடங்குவாய்!
நந்தம் தமிழர் பழக்கம் இது என்பாய்;
நாணமில் இந்நிலை ஒழிந்திடு மட்டும் நீ
(உருப்பட......)ஆள்சேர வில்லை என்று அரைமணி நீட்டுவாய்;
அரிய தலைவர்தாம் வராமையைக் காட்டுவாய்;
நீள்உரை ஆற்றுவோர் மேல் குற்றம் சாட்டுவாய்;
நித்தமும் இப்படிப் பொழுதெல்லாம் ஓட்டுவாய்; (உருப்பட......)இரண்டே நொடியில் முடிப்பதாய்ச் சொல்லுவாய்;
இருபது மணித்துளி வெறும்வாயை மெல்லுவாய்;
திரண்டுள மக்களின் உணர்வையும் கொல்லுவாய்;
செயல்திறம் இன்றி நீ எப்படி வெல்லுவாய்?
(உருப்பட......)முன்னிலை யாளர்கள் பன்னி உரைப்பதும்,
மூத்தவர் வாழ்த்துரை சொல்லிக் கழிப்பதும்,
பின் உரையாளர் சொல் வானைக் கிழிப்பதும்,
பேச்சுப் பேச்சே, வெறும் பேச்சுன்னை அழிப்பதும். (உருப்பட......)உரிய பொழுது ஒன்றைத் தொடங்கி முடிக்கிலாய்;
ஒவ்வொரு பேச்சுக்கும் நேரம் வகுக்கிலாய்;
இருபது பேர்களைப்** பேச அழைக்கிறாய்;
ஏழில் தொடங்கி நள்ளிரவில் முடிக்கிறாய்.
- தங்கப்பா 01.08.1999.
**1999 என்பதால் 20 பேர் என்றார் தங்கப்பா. இப்பொழுதெல்லாம் 2 அல்லது 3 மடங்கு 20 பேர் அழைப்பில் 'போடப்' படுகிறார்கள். இந்தப் பாட்டைவிட அழுத்தமானது - (மதனபாண்டியன் இலெனின்) தங்கப்பா படைத்த 'மன்னூர் மாநாடு.' 'வேப்பங்கனிகள்' தொகுதியும் அத்தகையதே. ~ அ. பசுபதி.

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)
உலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)
உயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.
நாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.
தன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.
ஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.
ஒரு மே மாத சனிக்கிழமை. ஒரு நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]

10.3.16

'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுதி ~ தேவமைந்தன் கலாபதி மதிப்புரை பகுதி 3

Rajaji III
காதல் சம்பந்தமான கதைகளும்; பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை, இந்த மதிப்புரையை நான் எழுத ஒத்துழைத்த நண்பியர் எண்பித்தனர். இது எனக்கு வியப்பை மட்டுமின்று, தமிழ்த் திரைப்படக் கதைப்போக்குக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ படக் காலக்கட்டத்தில், அரங்கை விட்டு வெளிவரும் பெண்களின் முந்தானை நனைந்து பிழியப்பட்டிருப்பதையும்; மழைவிட்ட தூவானம் போல் அவர்களின் விழிகள் வெளிறியிருப்பதையும், கோவை இராயல் தியேட்டருக்கு முன்பு எங்கள் பள்ளி இருந்ததால் கண்டிருக்கிறேன். இப்பொழுது நயன்தாரா த்ரிஷா போன்றவர்கள் அந்தப் போக்கை மாற்றிவிட்டனர். இபொழுதெல்லாம் ஆண்கள் ‘சப்ஜெக்ட்’ படங்கள் அதிகமாதலால் ~ சூது வாது பொய் கபடம் மதம் மாச்சரியம் முதலான அறுவகைக்குணங்கள் தமிழ்த் திரையுலகை ஆள்கின்றன. இப்பொழுது நாம் ராஜாஜி ராஜகோபாலனின் மறுபக்கக் கதைகளுக்கு வருவோம்.
ஆயுள்வேத “டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்” என்று ‘பத்தியம்’ கதை விழிக்கிறது. “மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்” என்று தூங்கப் போகிறது. இடையில் பத்தியம் பத்தியமாகவே ஜெயிக்கிறது. ஆயுள்வேதத்தையே சத்துவ-பத்திய வாழ்க்கையாகக் கொண்டொழுகும் அவர், தன் தொழில் தர்மமே குறியென்று வாழ்கிறார். ‘Non compromising medication’ என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் ‘திட்டவட்டமான பண்டுவமுறை’யையே தன் இயல்பாகக் கொள்கிறார். செல்வாக்கு மிக்கவர்தான். ஆனால், செல்வம் சேர்க்காதவர். ஏழ்மையே தாழ்வில்லை; எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலைபோய் விடக்கூடாது என்பதில் ‘வஜ்ரம்’ அவர். ஈழத்தமிழ் கொஞ்சி விளயாடும் இந்தக் கதையைப் படித்துப் பார்ப்பவர்கள் ‘பாக்கியவான்கள்.’ பானைக்கொரு சோறு:
“சேர்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியெலோ வரவேணும்.”
“காசு எவ்வளவெண்டாலும்...”
“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ”
இப்படிப் பேசுபவர் “வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான்.”(49)
‘விழிப்புகள்’ -- இந்தக் கதை நனவோடை முறையிலும் கனவுகாண் நிலைமையிலும் [stream of consciousness + dreaming brainy state] சொல்லப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியது முக்கியம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ~ நின்ற மரத்தின் கதை. இது விழுந்த மரத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் ‘நிகழ்மை’ [synchronicity என்பது உளத்தியல் தத்துவத்தில் வருவது; synchronization என்பது திரைப்பட அறிவியலில் வருவது] அவன் புலன்கள் ஒடுங்கவில்லை. ஆனால் சிந்தனை ஒடுங்குகிறது. மனமோ, மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் எய்துகிறது. பானுமதி என்னும் செவிலி/ உயிர்த்தோழி/ காதலியின் ‘அந்த’ முறுவல் அவனின் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.
‘கறுத்தக்கொழும்பான்’ - அகோ.. வாரும் பிள்ளாய்... இந்தக் கதைதானே ராஜாஜியையும் தேவமைந்தனையும் நட்பால் பிணைத்தது...சரசுவதி என்ற யதார்த்தமான ‘கேரக்டர்’...உலகெங்கும் சாதி மத மொழி நாடு பேதமற்றுப் பார்க்கக் கூடிய பெண்பாத்திரம்...”வேலிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒப்பாரிவைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளி வைக்கிறாள் என்பதை அந்த ஊரில் எவரும் அறிந்து கொள்வர்”(71) என்று அவள் அறிமுகம் தொடங்குகிறது. எங்களூரில் ஒருவர்.. பக்கத்து ஊரில் உள்ளவர்க்குப் போன் போட்டால் அதற்கேற்ப மென்மையாகவும்; தூரத்திலுள்ள ஊருக்கோ நாட்டுக்கோ போன் அடித்தால் அந்த ஊர்/நாடு எந்த அளவு தொலைவிலுள்ளதோ அந்த அளவுக்குத் தன் ‘வால்யூமை’ ஏற்றிக் கொள்வார். அப்படியிருக்கிறது, சரசுவதி, தன் ஊருக்குள்ளேயே முறைப்பாடு வைக்கிற ‘லெச்சணம்.’ சாவித்தல் அல்லது அறம் பாடுதல் அவளுக்குக் கைவந்த கலை. தருமனை தறுமன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைபவள். தலைமையாசிரியரைப் பிடிக்காத நண்பர் ஒருவர் ~ “என்ன ஹெட்மாஸ்டன் அவன்?” என்று கேட்பார் இங்கே. சரசுவதியின் மொழிப் புழங்கல், ரகர றகர ழகர ளகர லகர வேற்றுமைகளைத் தன் வயிற்றெரிச்சலுக்கேற்ப, மாற்றிக்[tune] கொள்ளும். அப்பேர்ப்பட்டவள், எந்தத் தருமனத் ‘தறுமன்’ என்று வைவாளோ, அதே தருமன் ~ வைரவசாமிக்குப் பொங்கலிட விறகு வாங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் அவள் சுமந்து வரும்போது பார்க்க நேர்ந்து சுமையைத் தன் தோளுக்கு மாற்றிக் கொள்ளும் பொழுதே அவள் வக்கிரம் நாண்டுகொள்ள; பரிவும் பாசமும் அவள் சித்தத்துள் நுழைந்து கோலோச்சத் தொடங்கி விடுகின்றன. மாற்றார் செய்கையால் நம் மனம் ஏற்கும் வேதியல்[ரசவாத] மாற்றமே இந்தக் கதையின் கொடுமுடி. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழ் வாசகர்களே! ‘கொழும்பான்’ என்பது, என்ன மரமென்று சொல்லுங்கள் பார்ப்போம் ;)
‘தெற்காலை போற ஒழுங்கை’ கதையப் படிக்கும் முதியோர் இல்ல மாமியார்கள் அழுதே விடுவார்கள். தமக்கிப்படியொரு மருமகளைத் தரவில்லையே ஆண்டவரே என்று கடவுளை நொந்து கொள்வார்கள். ஒனக்கெழுதி வச்சது அப்படித்தான் என்று அடுத்த கட்டில் கெழம் சிடுக்கெடுக்கும். அப்படிப்பட்டவள் ~ இக்கதையில் வரும் பொறுப்பான மருமகள். மகன் தங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று பெற்றோர் நம்ப, ‘தயக்கம் தங்கரெத்தின’மான மகன் தயங்ங்ங்ங்க, புதிதாக வரும் மருமகளோ, “நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவன் தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பைத் தானே ஏற்பதும்... கற்பனை போலிருந்தாலும் அருமை. நாம் பார்க்காமல் விடுவதால் அத்தி பூக்காமல் காய்க்கிறதா என்ன? ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் ‘ரெகுலர் சமாச்சாரங்களை’ விவரித்தாலும் இந்தக் கதை தெற்காலை போற ஒழுங்கான ஒழுங்கையாக, கோர்வையாக, அழகாக, நுட்பமாக நவிலப்பட்டிருப்பது ராஜாஜியைச் சிறந்த ‘கதைசொல்லி’ ஆக்குகிறது.
‘மெளனத்தின் சப்தங்கள்’ - ‘ழுஃதனெ[ய்]சிய’ என்று அழைக்கப்படும் ~ ‘கருணைக்கொலை’ என்று பிழையாகச் சொல்லப்படும் அறச்செயல் குறித்து மீயுயர் மாந்தநேயத்துடன் ஆராயும் அரிய கதையாடல். இதற்காகவே ராஜாஜியின் கோட்டில் ‘எம்.வி.பி.’ பதக்கத்தை அணிவிக்கிறேன். Sue Miller எழுதிய ‘While I Was Gone’(1999) என்ற அருமையான புதினத்தில், ‘அறவழி உயிர்நீக்கல்’ என்னும் euthanasia -வை ஜோயி என்றழைக்கப்பெறும் டாக்டர் பெக்கர் [Dr. Becker] என்ற கால்நடை மருத்துவர், ஆயிரக்கணக்கை எட்டும் அளவு செல்லவிலங்குகளான நாய்களுக்குச் செய்திருப்பாள்/ர். மனிதக் கொலை செய்தவனான எலெ மஃயூ என்னும் பழைய நண்பன், தன் செல்ல நாய்க்கு அந்தச் செயல் அவளால் செய்யப்படக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பான். அந்தப் புதினத்தைத் தற்கால ஆங்கிலம் அறிந்தவர்கள் வாசியுங்கள். தவற விடாதீர்கள். இங்கே வரும் மனிதர், ‘தானுண்டு தான் வேலையுண்டு’ என்று இருப்பவர். மூலிகை வைத்தியர். சிவனடியான் ~ சரியான பெயர். சிவனே வைத்திருப்பார் போல. தன் மகனாக இருந்தாலும் தீராத நோயினால் வலியால் துடிக்கும் நிலையில், வைரவசாமியை வேண்டிக்கொண்டு ‘அந்த நாள்’ மாலை முழுவதும் தன் மகன் ஐயங்கனுக்காக இறுதி ஒரே ஒரு மருத்துவமாக மூலிகைகளை அரைத்து, ஐயங்கன் ஆசையாக வளர்த்த ஆட்டின் பாலிலேயே அக்கலவையைக் கரைத்து ஊட்டுவார். “நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன் போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்து கொண்டார். அப்போது அவரெழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது” என்று படித்துவிட்டு என் நண்பி அழுத அழுகைதான் ~ இந்த மதிப்புரையையே நான் அவர்களுடன் சேர்ந்து எழுதக் காரணமாயிற்று, “என்ரை மோனை..!” என்று இந்த மெளனத்தின் சப்தங்களுக்கு அந்தமும் ஆதியுமாக ஆன சிவனடியானின் ஓங்கார அலறல் உலுக்கியெடுத்துவிடும்... இக்கதையை உண்மையாக வாசிப்பவர்களை. முடிவில், “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது”(115) என்று, நடந்ததை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஓரிருவர், ஊரெழுமுன்னே உறக்கத்திலிருந்து விழித்து கொண்டவர்கள், தமக்குள் சொல்லிக் கொள்வதாகக் கதை முடிகிறது. “தொகுப்பினுள்ளே உருக்கமான மணியான கதை” என்று என் சகவாசகியரிடம் பதக்கம் பெற்ற கதை.
‘ஆசை வெட்கம் அறியும்’ என்ற ‘கடோசி’[கரிசல் சொல்]க் கதை ஆண்மனத்தின் அபத்தமொன்றை மென்மையாக நவிலுகிறது. தன்னிலும் முப்பது வயது குறைந்தவளைச் சின்ன வீடாக ‘செட்-அப்’ செய்து சாதிக்க, சிவப்பிரகாசத்தார் தமக்கு நண்பரான ‘லாயர்’ ஒருவரைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வழக்குரைஞரோ மனச்சாட்சியும் விவேகமும் உள்ளவர். ‘ஃபீஸ்’ஐப் பெரிதாக எண்ணாதவர். அன்னபூரணி அக்காவைத்தான் உயர்வாகக் கருதுபவர். மனவியலடிப்படையிலும் உலகியலடிப்படையிலும் குழந்தையொன்றுக்கு எடுத்துச்சொல்வதுபோல் பக்குவமாக சிவப்பிரகாசரிடம் எடுத்துச்சொல்லி, உண்மையுரைப்போனாகவும் விளங்கி, அவரைவிட்டுப் பிரிந்துபோன இல்லாளை சிவப்பிரகாசர் இல்லத்தில் இருப்பவள் ஆக்குகிறார். இந்த ‘லாயர்’ இன்னொரு கதையில் வரும் ‘ஆயுள்வேத மருத்துவர்’ இருவரும் ‘குறிக்கோள் கதைமாந்தர்’[Ideal characters] என்ற ‘கதைமாந்தர் வகை’யில் அடக்கப்பெறுவர். யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்துப் பேசும் வார்த்தைகள்(213) ~ எனக்கு, இந்தியத் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் பேச்சு வழக்கை மிகவும் நினைவுபடுத்தியது. மிகவும் சுவாரசியமானது.. இக்கதையில் வரும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பேச்சு வழக்குத்தான்.
‘கடவுளும் கோபாலப் பிள்ளையும்’ என்ற பதின்மூன்றாவது கதை, புதுமைப்பித்தனை, தன் தலைப்பால் நினைவூட்டுகிறது. ஆனால், இதில் கடவுள் வருவதில்லை. அவருடைய முகவர்/பிரதிநிதி/தூதுவர்/தொண்டன்... வருகிறார். அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறார் கோபாலப் பிள்ளை. நமக்கும், எல்லோருக்கும் இப்படிப்பட்ட கடவுளின் தூதுவரிடம் கேள்விகள் பற்பல கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வரும்தான். இந்தக் கதையில், மற்ற கதைகளைப் போலல்லாமல், கடவுளின் தூதரிடமிருந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. “இந்த யுகத்து இன்னல்களைத் தீர்க்கப் படைத்தவனாகிய தனக்கே வழி தெரியவில்லை என்று சொல்லி நழுவுபவர்தான் இன்றைக் காலக் கடவுள் என்று சொல்கிறீர்களோ?”(189)என்று கடோசியாகக் கேட்கும்போது, வேறு வழியில்லாமல் மாயமாய் மறைந்து போகிறார். வரமாவது வாங்கியிருக்கலாமே என்று கோபாலப் பிள்ளையின் மனைவி அங்கலாய்க்கும்பொழுது, “வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் எப்போதோ வற்றிப்போய் விட்டது. அதை மறைக்கவே தலையைக் காட்டிவிட்டுப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கிறார். மனிதர்கள் இனியும் அவரை அழைப்பதை மறந்துவிட்டு தமக்குள் கடவுளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் இன்றுள்ள இன்னல்கள் தீர ஒரேவழி”(190) என்று கோபாலப் பிள்ளை சொன்னாலும் “அவர்” மறைந்தபின் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்ததுபோன்ற உணர்வு மேலிட்டது......என் மனம் ஏனோ கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தது”(190) என்ற கோபாலப்பிள்ளையின் ‘நன்றிநவில்தலில்’[Thanksgiving] கதை முடிகிறது.
மதிப்புரைக் காப்புரிமை: தேவமைந்தன் (Puducherry A. Pasupathy) 10/03/2016



9.3.16

குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ தேவமைந்தன் கலாபதி மதிப்புரை ~ பகுதி 2


‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைகளில் காதல் உணர்வுகளும்(emotions) உணர்ச்சிகளும் (feelings) கொப்பளித்துத் ததும்புகின்றன.
‘மேலும் சில கேள்விகள்’ - ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழுகிற உள்மன நெளிவுசுளிவுகளும்; அதை அந்தத் தாயைவிட மகள் எவ்வளவு தெளிவாகக் கையாளுகிறாள் என்ற துல்லியம் ~ மீநுட்பத்துடனும் நிகழ்சமூக மனவியல் அடிப்படையுடனும் நவிலப் பெறுகின்றது. “ஸ்ருதி, இனி நீ இவரை அப்பா என்று கூப்பிடலாம்” என்று முடியும் ‘லாவண்யம்’ - பெண்மனத்துக்கே புரியக் கூடியதுங்கூட. திரைப்பட உத்திகள் இக்கதையில் அமைந்து ஒரு ‘சினிமா’வைப் பார்ப்பதுபோல வாசகரை ஆக்கிவிடுகிறது.
‘நிழலைத் தேடும் நிழல்கள்’ - கதையில் வரும் நித்யா ~ தேவனுக்காகவே என்று இருப்பவள் ~ அவள் பெற்றோர் வலுக்கட்டாயமாக சுமத்தும் மாப்பிள்ளையை மணம்செய்துகொள்ள நேர்கிறது. இடையில், தேவன் கரு நித்யாவிடம் உருவாவது, அவனுக்கும் தெரியாது. கதையின் கடைசியில்தான் தெரியவரும்...அவனுக்கே. இருபது வருடம் வரை தேவன் தனியாளாகவே இருந்து எப்படியும் தன் காதலியைப் பார்ப்போம் என்று கொள்ளும் அதீதமான தன்னம்பிக்கை, தன் குழந்தைக்கே அவன் தந்தை என்றறிவதாக நிறைவடைகிறது. இப்படி ஒரு உணர்ச்சிமிக்க மர்மத்தைக் கட்டமைக்க ராஜாஜிக்கே முடியும்.
‘ஆதலினால் காமம் செய்வீர்!’ - கதை, “காதலின் இன்னொரு பரிமாணம்தான் காமம் ............ஆதலினால் காதலும் காமம் போன்றே உன்னதமானது”[116] என்ற மேலெழுத்துகளுடன்[epigraph] தொடங்குகிறது. ஆண்மையற்றவன் தன் காதலன் என்று அறிந்த பின்பும் வெறுக்காமல், அவன் தற்கொலைக்கு முயலும் பொழுதும் அவன் நண்பனுடன் சேர்ந்து காப்பாற்றுவாள் மெனூஷா. காதல் என்று வந்துவிட்டால் அதிலும் ஒரு தர்மம் உண்டு என்று காட்டும் ஆசிரியர், தொடக்கத்தில் வரும் பத்தியையும் கதைத் தலைப்பையும் ஏன் இவ்வாறு அமைத்தார் என்பது புதிராக உள்ளது. காமம் எது காதல் எது என்று, எரிமலைக் குளிரை எள்ளி நகையாடவா? நிருஷனை விட மெனூஷா ஒருபடி உயர்ந்தவள் என்று காட்டத்தான். காமத்தை எதிர்பார்ப்பாள் தன் காதலி என்ற தன்னம்பிக்கையின்மையை விடவும் தன் காதலனின் ‘ஜீவன்’தான் உயர்ந்தது என்று நம்பும் பெண்ணம்பிக்கையின் வடிவமாகத் திகழ்கிறாள் மெனூஷா.
‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - என்ற கதை மூவரைப் பற்றியது. முகுந்தன், பராசக்தி, சுபத்திரா. இம்மூவரையும் சுற்றி வருகிறது கதை. பராசக்தி அழகிதான். ஆனால் அவள் தங்கை சுபத்திராவின் அழகுக்கு முன்னால் அவள் வரமுடியாது. ஆனாலும், ஆண்கள் தன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்ற அளவுக்குப் போகும் சுபத்திராவின் நினைப்பே அவள் பிழைப்பைக் கெடுக்கிறது. எப்படி? தன் அக்காள் முகுந்தனைக் காதலித்துக் கைப்பிடிக்கும் மணமேடையில் கூட, சுபத்திராவின் கருவண்டுக் கண்கள் அத்தான் முகுந்தனின் முகமலரை வட்டமிடலாமா? தன் தங்கையைக் குறித்துப் பராசக்திக்குத் தீர்மானமும் தெளிவுமுள்ளதால், தன் தங்கையின் அகந்தைஆணவங்களுக்கு கணவனை விட்டுக் கொடுப்பதில்லை என்ற திடசித்தத்துடன் திகழ்கிறாள். முகுந்தனும் சபலமற்றவனாய் விளங்குவது அவளுக்கு மேலும் வலிமைதானே? முடிவில் தன் ஆடைகளாகத் தானே வரித்துக்கொண்ட அகந்தை ஆணவச் செருக்குகளற்று, இயற்கை மேனியுடன் குளியல் தொட்டியில் மயங்கிக் கிடப்பவள், தன் உள்மனப்போர் இலக்குகளான அக்கா அத்தானாலேயே காப்பாற்றப்பெற்று மருத்துவ மனையில் மனந்தெளிகிறாள். மருத்துவர் தெளிவுறுத்துகிறார். எப்படி? இப்படி - “உங்கள் நன்றியை முதலில் உங்கள் பிரதர்-இன் -லாவுக்குச் சொல்லுங்கள்; அவர்தான் உங்களை இங்கே நேரத்தோடு கொண்டுவந்து சேர்த்தவர்.” புரிந்து கொண்டு தன் மணிகுலுங்கும் குரலில், “தேங்க்யூ, பிரதர்!” என்று கூறுவதாகக் கதை முடிகிறது. இங்கே, இந்தக் கதைக் களத்தில், எதிரும் புதிருமான பெண்மனங்களிரண்டு இராம இராவண யுத்தம் நிகழ்த்துவது ‘அட்டகாசம்.’ எல்லாவற்றிலும் உடன்பாடு எதிர்மறை இருப்பதுபோலப் பெண்மனத்திலும் இருப்பதை ராஜாஜி இதிலே சித்திரித்துள்ளார். ஆனால் முகுந்தன் இன்னொரு கதைக்கு இவர் தலைப்பிட்டிருக்கும் ‘பெளருஷம்’ கொண்டு தான் கரையேறி, தன்னைக் காதலித்துக் கைத்தலம் பற்றியவளையும் கரையேற்றி, தங்கள் நிம்மதியையே குறிவைக்கும் பெண்ணையும் கரையேற்றுகிறான். ஆண்கள் பலருடைய உள்மனம், முகுந்தனுடைய கற்பு நிலையைக் கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொள்ளும் என்றாலும் பெண்கள் பலருடைய உள்மனம் முகுந்தனின் கற்புநிலையைப் பாரதிவழி ஆதரிக்கத்தான் செய்யும். ஆக, ஒரு கற்புக்கரசனை இந்தக்கதையில் நமக்கு அறிமுகம் செய்துவத்துவிட்டார் ராஜாஜி.
‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ - இதைப்பற்றி என் துணைமனத்தில், அறிந்தும் அறியாமலும், முகநூல் நண்பர்கள் + சன்றோர்களின் கருத்துகளை முதலிலேயே படியேற விட்டுவிட்டதால், அவை ‘மசானத்துப் பேய்கள்’ போல, திரும்ப என் கருத்துகளாக வேடம்போட்டு வர வாய்ப்புண்டு. ஆகவே, விதிவிலக்கான, ராஜாஜிக்குப் பிடித்துப்போன என் நோக்கில் ஒன்றைச் சொல்லுகிறேன். இதில் - ஓர் இரவுநேர எக்ஸ்பிரஸ் இருவரின் இல்லற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அஃறிணை என்று எதையும் தள்ளிவிட முடியாதுதானே? தொடர்வண்டிப் பயணங்களை நேசிப்பவர்கள் இல்லையா? இன்றுமென் இரவில், கனவைக் கனவென்று மட்டுமே கருத முடியாத/விரும்பாத உயிர்ப்புடன் திகழும் கனவுகளில் நான் பன்முறை பயணம் செய்த நீலகிரி எக்ஸ்பிரஸ் “தடக் தடக்” என்று பாலங் கடக்கிறது. அந்த எக்ஸ்பிரஸ் போலவே, இக்கதையில் வருவதும் இரவுநேர எக்ஸ்பிரஸ்தான். “காலத்தைக் குறைசொல்வதால் அது கோபித்துக்கொண்டு நமக்கு எதிராக எதுவும் செய்து விடாது. இதனால்தான் காலத்தையும் சிலவேளை கடவுளையும் குறை சொல்கிறோம்.”(143) விஜயா, ஆண்களின் புத்தியின் போக்குகள்(140-141) குறித்து அவதானிப்பவை ஆண்களில் பெரும்பாலோருக்குப் பொருந்தும்.
‘அந்த ஒருவனைத் தேடி’ - இந்தக் கதை, வேலைக்குப் போகும் அழகான இளம்பெண்ணுக்கு அவளுடன் பணிபுரியும் ஆண்களால் உருவாகும் உடல்ரீதியானவும் மனோரீதியானவுமான அவஸ்தைகளும்; அந்த ‘ஆண்’களிடமிருந்து ஒரு ‘பெண்’ணாக, தப்பித்துக்கொண்டே போகவேண்டிய அவலங்களும் உணர்த்தப் படுகின்றன. “ஆண்கள் என்றால் வேலைக்குப் போக வேண்டும்[‘உத்யோகம் புருஷலட்சணம்’]” என்றும் பெண்கள் அடுக்களையே கதி என்று கிடக்க வேண்டும் என்ற காலத்தைச் சேர்ந்தவளா தாரிணி? ஆனால் அவளுடைய உடல், பெண்ணுடலாயிற்றே! பெண்களுக்கு, தாம் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லும்பொழுதுங்கூட, ‘தன் தேகம் பெண்தேகம்’ என்ற விழிப்புணர்வு ‘டிராஃபிக் சிக்ன’லிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் இன்னும் மாறவில்லையே! “ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல்” தப்பித்தலை, தாரிணியாக (203) உங்களைத் தற்பாவனை செய்துகொண்டு படித்துப் பாருங்கள்.
‘செம்பருத்தி’ கதை முற்றிலும் வித்தியாசமானது. தாலிக்கு எவரும், எந்தப் பெண்ணும் கொடுக்க மாட்டாத தெய்விகத்தை மஞ்சு கொடுப்பதை வாசித்துணரும் வாசகர்கள், ‘தாலி என்பது கயறு மட்டுந்தான்’ என்ற வாதத்தையும்; ‘மங்கலவணி என்னும் மரபெல்லாம் சுத்தப் பேத்தல்’ என்று அடித்துச்சொல்லுதலையும் அறவே விட்டு விடுவார்கள். சுசியக்கா தாலியை வழமயான ஒரு ‘சாடிஸ்ட்’ பெரியம்மா “கழற்றி வையடி” என்று ‘கோரக் கோரிக்கை’ வைக்கும்பொழுது -- மஞ்சு புருஷனின் உருவத்தோடு நாம் ‘ஆஜர்’ஆகி, வெறுமனே வேடிக்கை பார்த்து, வேதனைப் படுகிறோம்.
‘பெளருஷம்’ கதையில், ‘இலக்கணம் மீறிய கவிதை’யான ஒருத்தி, தன் தாயுடைய சம்மதத்தின்/தூண்டுதலின் பேரில் ஆடவர்களுடைய சகவாசத்துக்குத் தன் ‘சுய’த்தை வர்த்தகப் பண்டமாக்கினாலும் ~ ஒரே ஒருவனின் ‘பெளருஷ’த்துக்குமுன், தன் அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி, ‘தான்’ தொலைந்து போவது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[தொடரும்]

8.3.16

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]
- மதிப்பீடு: புதுச்சேரி கலாவதி பசுபதி (தேவமைந்தன்)
கனடாவில் சட்டத்தரணியாகப் பணியாற்றும் ராஜாஜி ராஜகோபாலன், ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு; முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர், முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர், முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே ~ தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை - என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு, இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ்தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை, நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்புகொண்டதுதானே ஈழமும்?
இந்த சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவுசீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த்துடிப்புள்ள வாசகர் எவராயினும், இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண்வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள். [தொடரும்]

20.12.15

http://www.fondation-janmichalski.com/en/prix-jan-michalski/ பரிசாகட்டும்; இருண்மை இல்லாமல் அப்படியே 'பட்டவர்த்தனமாக'வும் 'அ(ம்)மணமாகவும்' --'இடக்கரடக்கல்' 'அவாய்நிலை' ஆகிய இலக்கணங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத transgressive என்னும் ஐரோப்பிய இலக்கிய வகையாகட்டும்; அதில் கரைகண்ட கேத்தி ஆக்கர் முதல் தமிழில் சாரு வரை - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொன்ன, அவர் பொழிவுகளில் முதற்பகுதியாய் இலங்குகிற ' சுற்றுமுற்றும் நிகழ்கணங்களில் அவதானிக்கிற ஒவ்வொன்றையும் எழுத்துசொல் அமைப்பில் பதிகிற' நோக்கிலக்கிய(observant) வகை எழுத்தில் முழுமை பெறாதவர்களே. சுந்தர ராமசாமி படைத்த 'ஜேஜே சில குறிப்புகள்'- இவ்வகை. துணிவும் அர்ப்பணிப்புணர்வுமுள்ள பெண்கள் இந்தவகை இலக்கியத்தை முன்னெடுக்க வந்தால், இலக்கியவகையிலாவது ஆணாதிக்கத்தின் 'டங்குவார்' கிழியும்!
# observant not transgressive

17.11.15

அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்

Facebook Puducherry Devamaindhan Wednesday, November 18, 2015

வாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று:

ஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை!
http://idealist4ever.com/comic-explains-why-anxiety-depression-are/

நேற்று-விடிவதற்கு முன் 03:32 am:

எம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: " மலரும் நினைவுகளோ அப்பா?" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'


பால்பேதமே இயற்கையின் படைப்புதான். தட்பவெப்ப வேறுபாடுகளிலும் பால்பேதமேன்?

Climate change is not gender-neutral

4.11.15

குமுதம் தீராநதி நேர்காணல்: நண்பர் முனைவர் சு.ஆ.வெ. நாயகர்

நேர்காணல்:
பிரஞ்சுமொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஈடுபாடு உங்களுக்கு எப்படி வந்தது?

புதுச்சேரிக்கும் பிரஞ்சுக்குமான தொடர்பு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.பலரைப்போல்நானும்+2 வரைபிரஞ்சு மொழியை விருப்பப் பாடமாக எடுத்து படித்தேன்.அந்தக்காலக்கட்டத்தில்சிறப்புவகுப்புகளுக்குசென்றுபயிலும்வாய்ப்புஎன்நண்பர்சுப்பிரமணிவாயிலாககிடைத்தது. பிரஞ்சுப்படைப்புகளுடனானதொடர்பு, அம்மொழியின்ஓசைநயம்என்னைஈர்த்துவிட்டன. பிறகு பிரஞ்சுமொழியில்இளங்கலை, முதுகலை பட்டம்முடித்தேன். பிரஞ்சு-தமிழ்வினைத்தொகைளைஒப்பாய்வுசெய்துபேராசிரியர்இரா. வெங்கட்டராமன்நெறியாள்கையில்இளம்முனைவர்பட்டம்பெற்றேன்.முனைவர்பட்டஆய்வுக்குசுவிட்சர்லாந்தைசேர்ந்தபிரஞ்சுஎழுத்தாளர்‘பிலேஸ்சாந்த்ரார்புதினங்களில்விலகித்தப்புதல்எனும்பொருள்கோள்’ தலைப்பில்பேராசிரியர்இரா.கிருஷ்ணமூர்த்தியின்நெறியாள்கையில்ஆய்வினைசெய்துமுடித்தேன்.

 நீங்கள் எப்படி மொழிபெயர்ப்புத்துறைக்குவந்தீர்கள்?

தொடக்கத்தில்பொழுதுபோக்காகவும்பின்னர்பயிற்சியாகவும்மொழிபெயர்ப்பினைச்செய்துவந்தேன். பிறகு, அதில்உள்ளசவால்களும், சுவாரசியங்களும்அப்பணியைச்செய்துமுடிக்கும்போதுகிடைக்கும்மனநிறைவும்என்னைத்தொடர்ந்துஇயக்கிவருகின்றன.

 பிரஞ்சு மொழிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.மொழிபெயர்ப்பிற்கு எத்தகைய படைப்புகளைத் தெரிவு செய்வீர்கள்? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.
என்னைக்கவர்ந்தஎந்தபடைப்பாகஇருந்தாலும், அதைநம்வாசகர்களிடம்அதேவனப்புடன்கொண்டுசெல்லமுடியுமாஎன்பதைமுதலில்எண்ணிப்பார்ப்பேன்.படிக்கும் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு பிரதியை புரிந்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லாமல் பார்த்து கொள்வேன். மொழிநடை ஒருபுறமிருக்க, பண்பாட்டுக் கூறுகள் இத்தெரிவில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வாசிப்பில் நெருடல்கள் இல்லாத கதைகளாகத் தெரிவு செய்வேன். எடுத்துக்காட்டாக நான் மொழிபெயர்த்த சில கதைகளைச் சொல்லலாம்.
செருப்பு ஜோடி ஒன்றை கணவன் மனைவியாக்கி புனையப்பட்ட “ஜோடிப் பொருத்தம்”, உயர்காவல் அதிகாரியின் இடதுகை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் சிக்கலை சுவையாக எடுத்துச் சொல்லும் “கலகம் செய்யும் இடதுகை”.
நெருங்கிய உறவினர் இல்லாத ஒருவர் மரணத்தை எதிர்பார்த்து தமக்குத்தாமே பல மலர்வளையங்களை வாங்கி, அவற்றில் கற்பனையான உறவுமுறைகளை எழுதிவைத்த சோகத்தை சொல்லும் “எங்கள் சிறந்த வாடிக்கையாளர்”. இக்கதைகளை எந்த மொழியில் கொண்டு சென்றாலும் வாசகருக்கு எளிதில் போய்ச்சேரும்.
சிறுகதைகளை பொருத்தவரையிலும் நான் படித்து ரசித்தவற்றை என் நண்பர்களோடும் பேராசிரியர்களோடும் பகிர்ந்து கொள்வேன். நான்அடிக்கடிசந்திக்கும்என்பேராசிரியர்கள்கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இலக்கியநண்பர்களானஎழுத்தாளர்கள்கி.ரா, பிரபஞ்சன், செயப்பிரகாசம்,பசுபதி,பஞ்சாங்கம்,நாகரத்தினம்கிருஷ்ணாபோன்றோரிடம்உரையாடும்போதுகதையின்உள்ளடக்கத்தைசொல்வேன்.மொழிபெயர்க்கஎண்ணியிருக்கும் கதை தமிழ் வாசகர்களை ஈர்க்குமா என்பதை தெரிந்துகொள்ள இது எனக்கு உதவிபுரிந்தது. இதே போன்ற கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேனே என்று யாராவது ஒருவர் சொன்னால் அவர் குறிப்பிடும் கதையை ஒப்பிட்டு பார்த்து நான் தேர்ந்தெடுத்துள்ள படைப்பில் கொஞ்சமாவதுபுதுமை இருந்தால் மட்டுமே மொழிபெயர்க்கத் தொடங்குவேன்.

 சில பண்பாட்டுக்கூறுகள் வாசகர்களுக்கு புரியாமல் போக வாய்ப்புண்டு. அத்தகைய நேரங்களில் எப்படி எதிர்கொள்வீர்கள்?
அதுபோன்ற சமயங்களில் ஒன்றிரண்டு அடிக்குறிப்புகள் தேவைப்படும். அவை அதிகமானால் மொழிபெயர்ப்பு பிரதிக்கு ஆய்வேட்டு முகம் வந்துவிடும். அவற்றை அறவே ஒதுக்கி விட்டாலும் முகம் மங்கலாக தெரியும். இதுபோன்ற இக்கட்டைத் தவிர்க்கவே மொழிபெயர்ப்புக்கான படைப்புகளைத் தெரிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
 ஒரு படைப்புக்கு ஒரே மொழி பெயர்ப்புதான் சாத்தியமா?
அப்படி சொல்லிவிட முடியாது. எப்படி ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும், அவரவர் பாணியில் விவரிக்கிறார்களோ, அப்படித்தான் இதுவும். ஒரே சம்பவத்தை, ஒரு செய்தியை உங்கள் அப்பாவிடம் ஒரு விதமாகவும், உங்கள் பேரனிடம் வேறு வழியிலும் விளக்குவதில்லையா.எண்ணங்களை வெளிப்படுத்துவதில்,ஒரே மொழிக்குள் இப்படி வேற்றுமைகள் இருக்கும்பொழுது இருமொழி தொடர்புடைய மொழி பெயர்ப்பு எனும் இந்த பரிவர்த்தனையில் நிச்சயமாக, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியமே. தவிர மொழி பெயர்ப்பாளனின் மொழிப்புலமை, அனுபவம், மொழிபெயர்ப்புக்காலம் எனப்பல அம்சங்கள் மொழியாக்கத்தைதீர்மானிக்கின்றன. எனவே, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியம் மட்டுமல்ல வரவேற்கத்தக்கதும் ஆகும்.
 இப்படி பல மொழி பெயர்ப்புகளைக் கொண்ட பிரெஞ்சு படைப்பு ஏதாவது இருக்கிறதா?
பலவற்றைச் சொல்லலாம். அண்மையில் என் பேராசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,மதாம்பொவாரி எனும் பிரஞ்சு புதினத்தின் ஐந்து ஆங்கில மொழி பெயர்ப்புகளைக் காட்டினார். அவற்றில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து Guillemin Fletcher வெளியிட்டுள்ள நூலினையும் கொடுத்தார். இந்த ஐந்து மொழி பெயர்ப்புகளைத் தவிர இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அதே படைப்புக்கு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. எனவே காலந்தோறும் மாறிவரும் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரே படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன.

 படைப்பு,மொழி பெயர்க்கப்படும் காலத்திற்கும்உருவான காலத்திற்குமான இடைவெளி அதிகமாக இருக்கும் போது ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பீர்கள்?
உண்மைதான், எந்தப் படைப்பாளரும் அன்றைய வாசகரை மனதில் வைத்தே தன் படைப்பினை உருவாக்குகிறார். அது எழுதப்பட்ட காலத்திற்கும், இன்றைய (மொழி பெயர்க்கப்படும்) காலத்திற்குமான இடைவெளி நீண்டிருந்தால், இன்றைய வாசகர் புரிந்துகொள்ளும் வகையில் மொழி நடையில் மொழி பெயர்ப்பினை மெருகேற்ற வேண்டி இருக்கும். நான் முன்பே சொன்னது போல, ஒரே மொழியை அறிந்தவரும் தன்னை அறியாமல் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுபோலவே மொழிபெயர்க்கப்படும் காலத்திற்கு ஏற்ப மொழியாக்க நடையும் மாறுகிறது.
 இதற்கு ஏதாவது சான்று கூறமுடியுமா?
ரஷ்ய படைப்புகளின் மொழிபெயர்ப்பைச் சொல்லலாம்.அண்மையில்சிலபடைப்புகள்நேரடியாகரஷ்யமொழியிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அன்றைய மொழிபெயர்ப்புகளை இப்போது வரும் மொழியாக்கப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது விளங்கும். தரமான இலக்கியப் படைப்புகள்பலஆண்டுகளுக்கு முன்பேமொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவற்றை மீண்டும் இன்றைய தமிழ் மொழிநடையில் வழங்குவதில் தவறில்லை.
 பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆங்கில வழியாகவே வந்துள்ளன. உங்களைப் போன்றோர் அம்மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வருகிறீர்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எந்த ஒரு பொருளையும் நேரடியாக, முதல் ஆளாக நுகர்பவரின் அனுபவத்திற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. அது கைமாறி இரண்டாவது, மூன்றாவது ஆளுக்குப் போகும்பொழுது நிச்சயமாக முதல் நபர் ருசித்த அதே சுவை,அவருக்குக்கிடைத்த அதே அனுபவம் கிட்ட வாய்ப்பில்லை. இங்கு முதல் நுகர்வாளர் மூலப்படைப்பின் வாசகர், அதாவது Native Speaker (படைப்பின் மொழியையே தாய் மொழியாக கொண்டவர்) இப்படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுது அவர் இரண்டாவது நுகர்வாளர் ஆகிறார். ஆங்கில வழியாக வரும்இந்த மொழிபெயர்ப்பு தமிழ் வாசகர்களுக்கானது அல்ல. ஆங்கில வாசகர்களை மனதில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் இயங்கியிருப்பார். எனவே மூன்றாவதுநுகர்வாளர் என்ற நிலையில் தமிழ் வாசகர்கள் முழுமையான வாசிப்பு அனுபவத்தை இழக்க நேரிடுகிறது

 விளக்கமாகக் கூற முடியுமா?
பிரஞ்சில் இருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்க்கும்பொழுது மொழி பெயர்ப்பாளருக்குச் சில வசதிகள் உள்ளன. பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் நீ, நீங்கள் போன்ற ஒருமை பன்மை வேற்றுமைகளை அறிந்து இச்சொல்லை மொழிபெயர்ப்பார். ஆனால் இந்த இரண்டு சொற்களுக்கும் you என்ற பொதுச் சொல்லே ஆங்கிலத்தில் உள்ளதால் ஆங்கிலம் வழியாக வரும் தமிழ் மொழிபெயர்ப்பில் மூலப்பிரதி ஆசிரியரின் நோக்கம் வெளிப்படாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. மொழி பெயர்ப்பாளரின் ஊகம், தெரிவு, அனுபவம் போன்றவையே இச்சொல்லின் தமிழ் வடிவத்தை முடிவுசெய்யும். இப்பிரச்சனை தமிழில் இருந்து பிரஞ்சுக்கு மொழி பெயர்க்கும்போதும் எழும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, நம்மிடம் உள்ள அவன், அவர், அவள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் பொழுது, ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மூலப்படைப்பின் எடுத்துரைப்பைக் கொண்டு வர மொழிபெயர்ப்பாளர் சில உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். பிரஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்ப்பவருக்குச் சில மரபுத்தொடர்களை மாற்ற வேண்டியிருக்காது.
சான்றாக,Il a un bras long, அவன் ஒரு பெரியகை, tu auras la fete உனக்கு கச்சேரி இருக்கு போன்ற சொற்றொடர்கள் பிரஞ்சிலும் அதே பொருளில் வழங்கப்படுவதால் மொழிபெயர்ப்பு எளிமையாகவும் இயல்பாகவும், சுவையாகவும் அமையும்.
மேலும், பெயர்களின் உச்சரிப்பில் பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் முறையாக செயல்படமுடியும்.
பெயர்களின் உச்சரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா?
கவனம் தேவை என்பது தான் என் கருத்து.
உதாரணமாக, சிலவர்ணனைகளில், ‘இப்படி இவன் எட்டப்பனாக மாறுவான் என்று யாராவது நினைத்திருக்கமுடியுமா?’ என்ற தொடரில் ‘எட்டப்பன்’ எனும் பெயர்எத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது விளங்கும். அரிச்சந்திரன் போலத்தான் பேசினான் என்ற உவமையிலும் இதே நிலை தான். பிரஞ்சில்,‘Harpagon’ அர்பாகோன் ’ போல் நடந்துகொண்டான் எனும் தொடரில் அர்பாகோன்என்பவன் மொலியேரின் நாடகமொன்றில் பாத்திரம் என்பதும்கருமி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருவதும் அறியாதவாசகர்களுக்கு அப்பெயர்எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, பெயர்களை-அவை எந்தநாட்டிலிருந்து வந்தாலும் - உரியமுறையில் பதிவுசெய்வது எழுத்தாளார்களின் கடமையாகிறது. சான்றாக நம் பெயர்களான மாலதியை ‘மலாதி’ (பிரஞ்சு மொழியில் நோய் எனும் பொருள் ) என்றும் சீத்தாபதியை சீதபேதி என்றும் உச்சரித்தால் பொறுத்துக்கொள்வோமா?மூலஆசிரியர்களின்பெயர்களையும்சரியாகஉச்சரிக்கமுயலவேண்டும்.தமிழில்கிடைக்கும்ஒலிச்சேர்க்கைகளைபயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அல்பெர்கமுய்,ழான்போல்சார்த்ர்,வொல்த்தேர்போன்றவர்களின்பெயர்கள்முறையாகதமிழில்வழங்கவேண்டும்.

 மொழி பெயர்ப்பாளருக்கு இருமொழிகளிலும் திறமைவேண்டும், இதைத்தவிர, நல்ல மொழிபெயர்பாளருக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன?
பன்மொழிப்புலமை மட்டுமே மொழிபெயர்ப்புக்கு உதவிட முடியாது. மொழிப் புலமை என்பது passport மட்டுமே. அடிப்படைத் தகுதி. முதல் படைப்புகளை மொழி பெயர்க்கும் பொழுது படைப்பு உருவான காலம், இடம் – நாடு கதை மாந்தர்களின் பண்பாட்டுக் கூறுகள் என எல்லாவற்றையும் அறிந்திருப்பது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள சொற்களான கட்டுக்கழித்தி, ஒத்து ஊதுதல், ஐஸ்வைத்தல், பன்னீர் தெளித்தல் போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழுக்கே உரிய இச்சொற்றொடர்களைப் பிரஞ்சில் புரிய வைக்க இவற்றுக்கு இணையான பதிலிகளைத்(Equalivalents) தேடியாக வேண்டும். அதேசமயம், அகராதியைமட்டுமேநம்பிசெய்யப்படும்எந்திரமொழிபெயர்ப்பைஏற்றுக்கொள்ளமுடியாது. Spirit is willing but the flesh is weakஎன்பதைVodka is strong but the meat is softஎன்றரஷ்யமொழிபெயர்ப்பைசுட்டிஇதனைவிளக்குவதுண்டு.
ஆனால் சில நேரங்களில், அயல் மொழிகளில் உள்ள மரபுத் தொடரை அப்படியே இறக்குமதி செய்வதையும் பார்க்க முடிகிறது. அவை புதிய வரவாக நம் மொழியில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, சிவப்புக்கம்பள வரவேற்பு (Redcarpet Welcome).அதேபோல், நம்மொழியில்உள்ளபொருள்பொதிந்தமரபுத்தொடர்கள்சிலவற்றைஅங்குகொண்டுசெல்லலாம். இவ்விஷயத்தில் மொழிபெயர்ப்பின் இலக்கு என்ன, அது யாருக்கானது என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்ய இயலும்.
 பண்பாட்டுக்கூறுகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
ஒரு மொழி சார்ந்த பண்பாட்டின் முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் மக்களின் மதம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என பல விசயங்களை உள்ளடக்கிய மொழி அறிவு தேவைப் படுகிறது. இவை தவிர மொழியின் புற வெளிப்பாடான உடல் அசைவுகளும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, பிரஞ்சுக் கதை மாந்தரோடு, தன் ஆள்காட்டி விரலை வலதுகண்ணுக்கு அடியில் வைத்து ஏளனமாக மற்றவரை பார்த்தார் என்றால் என்னை நம்பச் சொல்கிறாயா என்று பொருள் . இதை நேரடியாக மொழிமாற்றம் செய்தால் ‘என் கண்’ என்றுதான் வரும், ஆனால் பிரெஞ்சுப் பண்பாடுகளை அறிந்தவர் மொழிபெயர்க்கும் பொழுது, நம் தமிழ் மொழியில் இதற்கு ஈடான எனக்கு ‘காது குத்தியாகி விட்டது’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவார்.

 மொழி பெயர்ப்பில் அடிக்குறிப்புகள் தேவையா?
இயன்ற வரையில் அடிக்குறிப்புகளைத் தவிர்க்கவே நான் விரும்புவேன். காரணம் அவை வாசிப்புக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு. இது தொடர்பாகநொயெல்கொவர்ட் (NOEL COWARD) குறிப்பிடுவதைப் போல் “மாடியில் முதலிரவு நடக்கும் போது, அழைப்பு மணி ஓசையைப் போன்றது அடிக்குறிப்புகள்”. கட்டாயம் தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் சுருக்கமாகத் தரலாம்.இல்லையென்றால் படைப்பின் இறுதியில் தரலாம்.அடிக்குறிப்புகளைத் தவிர்த்து,வாசகருக்குவிளங்கும்வகையில்பிரதிக்குள்ளேயேசொல்லமுடிந்தால்மிகவும்நல்லது.
 மொழிபெயர்ப்பின் தேவைகுறித்துச் சொல்லுங்கள்.
இங்கே ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும், மொழிபெயர்ப்பின் உதவியால் பல எழுத்தாளர்களின் படைப்புகள் புகழ் அடைந்துள்ளன. சான்றாக, லூயிலாபோர்க் (Louis Laforgue) எனும் பிரஞ்சுகவிஞர் தம்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருந்தார். இவரது கவிதைகளைத்தான் டி.எஸ்.எலியட் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பிரஞ்சு வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படாத, கெளரவிக்கப்படாத இக்கவிஞரை மொழி பெயர்ப்புதான் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. இதேபோல் எட்கர் அலன்போ ஆங்கிலப் படைப்புகளை பிரஞ்சுக் கவிஞர்களான பொதலேர், மலார்மே ஆகியோர் மொழிபெயர்த்தார்கள்பொதலேரின் மொழியாக்கம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது. இவரது “The Purloined Letter” மறைந்து போன கடிதம் எனும் சிறு கதையைத்தான் புகழ் பெற்ற பிரஞ்சுச் சிந்தனையாளர் ஷாக் லக்கான் அதிகமாகக் கையாள்வார்.எனவே, மொழிபெயர்ப்பின் உதவியால் இருமொழிகளின் இலக்கியக்களமும் விரிவடைகின்றன. புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன என்பதும் விளங்குகிறது.
 நமது சங்ககாலச் செல்வமான குறுந்தொகையை பிரெஞ்சு மொழியில்பெயர்த்துள்ளீர்கள். அந்தமொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
எனக்கு மன நிறைவைத்தந்த பணிகளில் ஒன்றாக இந்த மொழிபெயர்ப்பைக் கருதுகிறேன். செம்மொழி தமிழ் உயராய்வு மையத்தின் ஆய்வு திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு விரைவில் நூல் வடிவம் பெற உள்ளது. மூலப்பாடலின் ஒலி பெயர்ப்பு, துறை, கூற்று, பாடல் ஆசிரியரின் பெயர் ஆகிய தகவல்களுடன் பாடல் வரிகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்துள்ளேன். மேலும், பாடலில் இடம்பெற்றுள்ள மலர்கள் தாவரங்கள் இவற்றின் பெயர்களை வித்தியாசமான எழுத்துருவில் தந்து அவற்றுக்கான விளக்கங்களையும் அடிக்குறிப்புகளாக இணைத்துள்ளேன். குறுந்தொகை 401 பாடல்களிலும் உள்ள மலர்களின் படங்களை வண்ணத்தில் நூலின் இறுதியில் கொடுத்துள்ளேன். பாடல்களில் உள்ள உவமைகளில் கையாளப் பெற்றுள்ள இப்பூக்களை வண்ணத்தில் பார்க்கும் பிரெஞ்சு வாசர்கர்கள் குறிப்பிட்ட பாடலின் ஆழத்தையும், அழகையும் எளிதாக சுவைக்க முடியும் இது முழுக்க முழுக்க பிரெஞ்சு வாசகர்களுக்கான நூல் என்பதால் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள தேவையான தகவல்கள் அடங்கிய முன்னுரையை நூலின் முகப்பில் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக, வேலன் வெறியாட்டு, மடலேறுதல், பசலை, போன்ற சங்க இலக்கியக்கூறுகளை பிரஞ்சு வாசகர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது
 இந்த மொழிப் பெயர்ப்பைப் பிரெஞ்சு மொழிக்கு கொண்டு செல்ல பொழிப்புரைகள் எந்த அளவுக்கு உதவி செய்தன?.
எனக்குப் பேருதவியாக இருந்தது உ.வே.சாவின் பொழிப்புரைதான். பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், ராகவஐயங்கார் ஆகிய பெருமக்களின் பொழிப்புரைகளோடு பல நூல்கள் துணை நின்றன. இப்பணியில்ஈடுபட்டிருந்தபோது, என்னைக்கடந்துசென்றதமிழாசிரியர்யாரும்குறுந்தொகைத்தொடர்பானஏதாவதுஒருசந்தேகத்தைதீர்த்திருப்பார்.இலெனின்தங்கப்பாமுதல்குறுந்தொகைஆ.மணிவரை (நீண்டபட்டியல்)பலதமிழ்ப்பேராசிரியர்கள்எனக்குதேவையானவிளக்கங்களைதந்துஉதவினார்கள்.
 அண்மையில் செம்மொழி நிறுவனத்தில் குறள் பீடம் பரிசு பெற்ற பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ அவர்களைச் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கு முன்னோடியாக சொல்ல வேண்டும். பரிபாடலை பிரான்சுவா குரோ அவர்கள் 1968 ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளார். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்தீர்களா? படித்து விட்டு பாராட்டினார். சில பாடல் வரிகளில் மொழி பெயர்ப்பை மெருகேற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். நூல் வடிவம் பெறும் பொழுது, நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்.
 பிரெஞ்சு வாசகர்களிடம் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு வரவேற்பு உள்ளதா?
பிரஞ்சு வாசகர்கள்நேரடியாக மொழிபெயர்க்கப்படும் படைப்புகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியின் வழியாகவோ மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் பிரெஞ்சு வாசர்களை அவ்வளவாக ஈர்ப்பதில்லை.
 சிறந்த மொழி பெயர்ப்பு என்பது எது?
மூலத்திலிருந்து விலகிச்செல்லாத மொழிபெயர்ப்பு சிறந்தது. உண்மைதான் ஆனால் வாசகனிடம் இருந்தும் விலகிசெல்லாததாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். பிரஞ்சுமொழியில் படித்தவாசகனுக்கு கிடைத்த வாசிப்பு அனுபவத்திற்கு நெருக்கமாக மொழிபெயர்ப்புப் பிரதியைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குத் தர முடிந்தால் அது சிறந்த மொழிபெயர்ப்புதான். தமிழ் வாசகரையும் அகராதியைத் தேடும்படி வைத்து விடக்கூடாது.
 மொழிபெயர்ப்புகளுக்கான தமிழ்ச்சூழல் எப்படியிருக்கிறது?மொழி பெயர்ப்புக்குப் போதிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா ?
வேண்டிய அளவுக்கு நேரடிமொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை தமிழில் இல்லை என்பது உண்மைதான். இத்துறையில் ஏற்படும் தேக்க நிலைக்குப்போதிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதுதான்முக்கியமானகாரணம்.பிரெஞ்சுப்படைப்புகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய பிரஞ்சு அரசின் தூதரகம் பொருளுதவி செய்துவருகிறது. இதேபோல் நம் இலக்கியப் படைப்புகளைப் பிரஞ்சு மொழிக்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். சாகித்திய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்திய மொழிகள் எனும் எல்லையை விரிவாக்கி உலக மொழிகளில் நம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தால் நல்லது.
 அயல்மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் புதிய வகையான வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது. இதைத் தவிர இத்தகைய படைப்புகளால் வேறு ஏதாவது பயன் உள்ளதா?
தமிழ்ப் படைப்புகளைத் தவிர ஏனைய மொழிகளில் உள்ள தரமான இலக்கியங்களை மொழி தெரியாத காரணத்தாலேயே வாசிக்க இயலாத நிலையைப் போக்கும் மகத்தான பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. படைப்பாளர்களும் மற்ற மொழிகளில் உள்ள புதிய சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள மொழியாக்கங்கள் உதவுகின்றன. பிரஞ்சு இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக வாசகர்களின் மத்தியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. கல்கி, புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் வரை பிரஞ்சு புதினங்களையும் கதைகளையும் மொழிபெயர்ப்பு வாயிலாகப் பலரும் வாசித்து வருவதை அறிகிறோம். இன்றைய தமிழ் இலக்கிய இதழ்களில் பல பிரஞ்சுப் படைப்புகள் குறித்த விவாதங்களும் கட்டுரைகளும் வருவதைக் காண முடிவதே இதற்குச் சான்று.
 மொழி பெயர்ப்பாளர்,படைப்பாளராகவும் இருக்க வேண்டுமா?
உங்கள் கேள்வியில் மொழி பெயர்ப்பாளர் படைப்பாளராக இருக்க முடியாது எனும் தொனி வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளரும் ஒரு வகையில் படைப்பாளர்தான் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். படைப்பாற்றல் இல்லாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு வெறுமனே சுவை, சத்து எதுவுமில்லாத நகலாகத்தான் இருக்கமுடியும். கவிதை மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரைமொழிபெயர்ப்பாளர் கவிஞராகவும் இருந்தால் கவிதை நடை இயல்பாக இருக்கும். அதே வேளையில் ஆர்வ மிகுதியில், தன் வரையறையைக் கடந்து, பொறுப்பை மறந்து மூலக் கவிதையின் சாயலில் தன் சொந்தக் கவிதையை எழுதிவிட நேரும் ஆபத்தும் உண்டு. அப்படிக்கிடைக்கும்கவிதைநன்றாகஅமைந்தாலும், அத்தகைய மொழி பெயர்ப்பைத் தழுவல் என்று தான் அழைக்க முடியும்.
ஸ்டெபான்மலார்மேஎனும் 19ஆம் நூற்றாண்டின்புகழ்பெற்ற பிரஞ்சுக்கவிஞர்,எட்கர் அலன்போவின்ஆங்கிலகவிதைகளைமொழிபெயர்த்தார். ஹான்ரிபரிசோஎன்றவிமர்சகர்மலார்மேசெய்தமொழிபெயர்ப்பின்தவறுகளைபோதியஆதாரங்களோடுசுட்டிக்காட்டுகிறார். மலார்மேசெய்தமொழிபெயர்ப்பைஅப்பொழுதுயாரும்சந்தேகித்திருக்கமுடியாது. தவறுநேர்ந்தால், படைப்பாளராகஇருந்தாலும்விமர்சனத்துக்குள்ளாகநேரும்என்பதைமொழிபெயர்ப்பாளர்கள்கவனத்தில்கொள்ளவேண்டும்.
 மொழிபெயர்ப்பாளர், வாசகர் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
ஓர் இலக்கியப் படைப்பை சாதாரண வாசகர் வாசிப்பதற்கும், ஒரு விமர்சகரோ அல்லது ஒரு திரைப்பட இயக்குநரோ வாசிப்பதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. இதே போல் மொழி பெயர்ப்பாளர் ஒரு படைப்பை வாசிக்கும்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடு தேவைப்படுகிறது. காரணம் இவன் இப்பிரதியை மீண்டும் ஒருமுறை படைப்பதற்காக(Recreation) வாசகருக்கு எனவே இவரது பொறுப்பும் கூடுகிறது. மொழி பெயர்ப்பாளான் படைப்பாளனாகவும் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இங்கு மேலும் விளக்கம் கிடைக்கிறது. அதாவது படைப்பாற்றல் இருந்தால்தான் தன்வாசிப்பு அனுபவத்தைவேற்றுமொழியில்வாசகர்களுக்குபரிமாற முடியும்

மூலப் பிரதிக்கு மொழிபெயர்ப்பாளர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?
எந்த மொழி பெயர்ப்பாளரும் ஆசிரியரை மிஞ்சவும் கூடாது விலகிச் செல்லவும் கூடாது. மூல ஆசிரியர் நம்முன் இல்லாவிட்டாலும் நம்மை நம்பி அவரது படைப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்து மொழிபெயர்ப்பாளர் இயங்க வேண்டும்; எப்படி ஒரு மருத்துவரை, வழக்கறிஞரை, ஆசிரியரை நம்புகிறோமோ அப்படித்தான்மொழிபெயர்ப்பாளரையும் நம்புகிறோம்.எனவே, அவரும் தமக்குள்ள கடமையை உணர்ந்து மூலப்பிரதிக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் அடிமையாக இருக்கத் தேவையில்லை. போல்ரிக்கேர் (PAULRICOEUR 1913 -2005) எனும் பிரஞ்சு தத்துவ அறிஞர், தனது “SUR LA TRADUCTION” என்ற நூலில் மொழிபெயர்ப்பாளரின் பணி குறித்த சில விளக்கங்களை தருகிறார் வாசகன் மூல ஆசிரியரிடமும் மூல ஆசிரியரை வாசகனிடமும் அழைத்து வர வேண்டும். இதனைமொழி விருந்தோம்பல்(L’hospitalitélinguistique-LINGUISTIC HOSPITALITY) என்கிறார்.இரண்டு பேரிடமும் வேலை செய்யும் சேவகனைப் போன்ற நிலையில் மொழிபெயர்ப்பாளர் இருக்கிறார். அவர் இருவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். எனவே மூல ஆசிரியரிடம் நேர்மையாகவும், வாசகரிடம் பரிவோடும் அணுகவேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும். ஆகவே எந்த இலக்கிய வகைமையாக இருந்தாலும் தன் எல்லைக்குள் இயங்கத் தெரிந்தவராக மொழி பெயர்ப்பாளர் இருக்க வேண்டும்.
 மூலப் பிரதியின் நடை, மொழி பெயர்ப்பிலும் எதிரொலிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதே அது முற்றிலும் சாத்தியமா?
ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் பொழுது மூல ஆசிரியரின் நடையைத் தான் மொழிபெயர்ப்பாளர் பின்பற்ற முயல்வார் என்றாலும் சில நேரங்களில் தன்னை அறியாமல் மொழிபெயர்ப்பாளரின் நடை மொழியாக்கப் பிரதிகளில் தலை நீட்டி விடும். பேச்சுமொழியில் வர்ணனை, உரையாடல் போன்றவற்றில் இந்தப்போக்கு அதிகமாக வெளிப்படும். எந்த வட்டார வழக்கையும் சாராத (குறிப்பாக மொழிபெயர்ப்பாளரின் சொந்த பேச்சு மொழி) பொதுவான தமிழில் (Standard Tamil) மொழிபெயர்ப்பது நல்லது. மொழி பெயர்ப்பு நடையைப் பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மூல ஆசிரியரை மொழிபெயர்ப்பின் பிரதியில் பேச வைக்க வேண்டும்.
தமிழில் உள்ள கதை கவிதை உள்ளிட்ட கலை இலக்கியத்துறை பிரெஞ்சு மொழி சார்ந்ததளத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறதா? அதே போல பிரெஞ்சில் உள்ள கதை கவிதைஉள்ளிட்ட கலை இலக்கியத்துறை தமிழ் மொழி சார்ந்த தளத்திற்கு ஏற்புடையதாகஇருக்கிறதா? ஏனெனில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றைமொழியாக்கம் செய்யும் போக்கு, அண்மைக்காலங்களில் இணையதளங்களின் தகவல்தொழில்நுட்பம்வளர்ந்த பிறகு அதிகமாகிக் கொண்டிருக்கிறது இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒருமொழியில்வெளிவரும்எல்லாபடைப்புகளுக்கும்அடுத்தமொழியில்அதேவரவேற்புகிட்டும்என்றுஎதிர்பார்க்கமுடியாது. எந்தபடைப்புஏற்புடையதாகஇருக்குமோஅதனைமொழிபெயர்க்கவேண்டும். நம்இலக்கியபடைப்புகளைஅறிமுகம்செய்யும்நோக்கத்தோடுபிரான்ஸில்வாழும்நண்பர்நாகரத்தினம்கிருஷ்ணாவுடன்இணைந்து “chassecroisefranceinde’ எனும்வலைப்பூஒன்றைபிரஞ்சு மொழியில்நடத்திவருகிறோம்.இதில், கதை, கவிதைதவிரதமிழ்ப்படைப்புகள்குறித்தபிரஞ்சுக்கட்டுரைகளும், தமிழர்கள்எழுதும்பிரஞ்சுப்படைப்புகளும்இடம்பெறகின்றன.


அதிநவீனப் போக்குகளுக்கெல்லாம் முன்னோடி பிரெஞ்சு மொழி இது.பின்நவீனத்துவப் போக்குக்கு முன்பே புதிய அலை என்ற உலகப் புகழ் பெற்ற நவீனகலை இலக்கிய வடிவத்தைத் தோற்றுவித்த மொழி இது. எழுத்தில் அலென்ரோப்கிரியேவிலிருந்து ஜார்ஜ் பெரக் வரை நவீன வடிவத்தை உருவாக்கிக்கொண்டேயிருந்தார்கள். தற்கால எழுத்தாளர்களில் அதுபோன்ற ஒரு போக்குஉருவாகிக் கொண்டிருக்கிறதா?

அப்படிக்குறிப்பிட்டுஓர்இலக்கியவகைமையைசொல்லிவிடமுடியாது.ஆனால், 21-ஆம்நூற்றாண்டின்தொடக்கத்தில், மாயஎதார்த்தவாதம்எனும்இலக்கியக்கோட்பாட்டைமுன்வைத்துசிலஎழுத்தாளர்கள்தங்கள்படைப்புகளைஅளித்தனர்.மரிஎந்தியாயே, வெரோனிக்ஓவால்தேபோன்றோர்இவ்வகைமையைச்சார்ந்தோர்.செர்ழ்துப்ரோவஸ்கிதன்புனைவுஎனும்புதுவகைஎழுத்தை 1977-இல்அறிமுகம்செய்தார்.ஆனிஎர்னோ,அலிஸ்பெர்னேபோன்றஎழுத்தாளர்கள்இவ்வகைப்படைப்புகளைவழங்கினார்கள்.
இலக்கியத் திறனாய்வு உலகில் பல புதிய போக்குகள் தோன்றியுள்ளன. அமைப்பியல்(ஸ்ட்ரக்சுரலிசம்) மார்க்சியவாதம், உளவியல்வாதம், கட்டுடைப்புவாதம் போன்றவை இவற்றுள் அடங்கும். இக்கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியவர்களில் ரொலான்ட் பார்த் (1915-1980), குலொது லெவி ஸ்த்ரோஸ் (1908-2009),கஸ்தோன் ப்ஷ்லார்; (1884-1962), லுயிசியன் கோல்ட் மான் (1913-1970), லூயி அல்துசார் (1918-1990), ழாக் தெரிதா (1930-2004), ழாக் லக்கான் (1901-1981) ஆகியோரைச் சுட்டலாம்.
இவர்களைத்தவிரபிரான்சிற்குவெளியேமரோக்கா, துனீசியா, அல்ஜீரியாபோன்றபகுதிகளில்வாழும்அமாதுகுருமா, தாகர்பென்ஜெலூன், அமீன்மலூப், அசியாஜெபார்போன்றஎழுத்தாளர்களும்கவனிக்கத்தக்கவர்களாகஇருந்துவருகின்றனர்.
அதிகம்விற்பனையாகும்நூல்களின்அடிப்படையில், இன்றையபிரஞ்சுவாசகரின்ரசனையைஅளவிடமுடியும்என்றால், அப்பட்டியலில்கியோம்முய்சோ, மார்க்லெவி,கத்தெரின்பான்கொல், மிஷெல்ஊல்பெக்,ழீல்லெகார்தினியே, பிரான்சுவாஸ்புர்தன், செபாஸ்த்தியன் ழப்ரிசோ, அன்னா கவால்தா, அமெலி நொதொம்ப்எனப்பலர்உள்ளனர்.

பிரெஞ்சு மொழி தவிர ஆங்கில மொழியாக்கமும் செய்கிறீர்கள். இதில் எதுஉங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது? இந்த வேறுபாட்டை எப்படிஉணர்கிறீர்கள்?
நான்அதிகமாகமொழிபெயர்ப்பதுதமிழ்,பிரஞ்சுதான்என்றாலும், என்னைமுதன்முதலில்மொழிபெயர்க்கஊக்கமளித்தஎன்ஆங்கிலப்பேராசிரியர்ராஜாஅவர்கள்Transfireஎனும்இதழுக்குஆசிரியரானபின்அவரதுஊக்கத்தால், ஆங்கில மொழியாக்கமும்செய்யத்தொடங்கினேன். ஆங்கிலத்திலிருந்துதமிழாக்கமும்செய்வதால்ஒருவகையில்என்ஆங்கிலமொழித்தொடர்புதொடர்வதற்குவழிசெய்கிறது.
பிரெஞ்சு கவிதைகள் மற்றும் அய்க்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்கிறீர்கள்
அந்த அனுபவம்?

ராபர்ட் ப்ராஸ்ட் சொல்வதைப் போல், “Poetry is what gets lost in translation”. கவிதையின் மொழிபெயர்ப்பில் வடிவம், பொருள், ஓசைநயம் என பல அம்சங்களில், சிக்கல் ஏற்படும்.
எனவே, எளிமையாகவும்செறிவாகவும்உள்ளகவிதைகளையேதெரிவுசெய்துமொழிபெயர்த்துள்ளேன்.வெரொனிக்தாட்ஜோ, அமாதுஅம்பாத்தேபா, சால்மாகர்மாதி, மொரீஸ்கர்மேல், பிராசான்ஸ்,ப்ரேவேர்எனபலரின்கவிதைகளைமொழியாக்கம்செய்துள்ளேன். தமியன்கப்ரியெல்ஸ்என்பவரின்ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம்செய்துள்ளேன். அவரதுஹைக்கூ கவிதைகளின்தொகுப்புஒன்றைகொண்டுவரும்எண்ணமும்உள்ளது. சுருக்கமாகவும், சுவையாகவும்உள்ளதால்கவிதைகளைபுரிந்துகொள்வதில்புரியவைப்பதில்சிக்கலில்லை.தமிழிலிருந்தும்பஞ்சாங்கம், சீனுதமிழ்மணிஉள்ளிட்டவர்களின்கவிதைகளைமொழிபெயர்த்துள்ளேன்
“தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகவும் பழமையானது. அதுவே முதன்மொழியாயும் இருக்கலாமென நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரஞ்சுக்காரர் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது ஒரு பெருங்குறையே. தமிழர்களின் வாழ்க்கை நலன்களைப் பிரஞ்சுக்காரர் அப்பொழுதே தெரிந்துகொண்டிருக்கலாம். அப்படித்தெரிந்து கொள்ளாத ஒரு பெருந்தவற்றை அவர்கள்நெடுங்காலம் வரை செய்துவிட்டார்கள்.” என்று பிரஞ்சுமொழிஅறிஞர்பியர்மேய்ல் 1911-1963 கூறுகிறார்.பிரஞ்சும்தமிழும்அறிந்தவர்கள்நிறைந்திருந்தகாலகட்டத்தில்புதுச்சேரியில்அதிகமாக மொழிபெயர்ப்புகள் வந்திருக்கவேண்டுமே?
புதுச்சேரியில்பிரஞ்சுஆட்சிநடைபெற்றபோது, தமிழ்பிரஞ்சுஇலக்கியப்பணியாகமொழிபெயர்ப்புகள், நூலாக்கங்கள்ஓரளவுநடைபெற்றன.ஞானுதியாகு, மரியதாசுப்பிள்ளை, சவராயலுநாயகர், தேசிகன்பிள்ளை,எதுவார்அரியேல்,ழூலியன்வேன்சோன், அதாம், பரஞ்சோதிரொலன், துரைசாமிப்பிள்ளை, காரவேலன், காரைசிபி, வேலாயுதனார், அடுத்ததலைமுறையில், ழான்பிலியோசா,பிரான்சுவாகுரோ, பட்டாபிராமன், தேசிகன், வாணிதாசன், அலேன்தணியேலு, தாவிதன்னுசாமி, முருகேசன், ஞானசம்பந்தன்,துரைசாமிநாயக்கர், லெயோன்ஸ்கதலீஸ்,மதனகல்யாணி, மதனகோபாலன், கிருஷ்ணமூர்த்தி, ராசகோபாலன், வெங்கடேசன்,வைத்தி,கிருஷ்ணசாமி, ஸ்ரீராம், வெங்கட்டராமன், மரி பியர்ஒகுய்ஸ்தேன், பக்தா,பன்னீர்செல்வம், ஜெயராஜ்டேனியல், திருமுருகன்ஆகியோரும்குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், பிரான்சில்வாழும்ஒர்சேகோபாலகிஷ்ணன், நாகரத்தினம்கிருஷ்ணா, முடியப்பநாதன், அப்பாசாமிமுருகையன், மொரே, போல்மிரியல், எலிசபத்சேதுபதி, ழான்லுயிக் ஷெவியார், முத்துக்குமாரன்சங்கிலி, கீதா,சண்முகசுந்தரம், நாகராஜன்போன்றோர்மொழிப்பாலம்அமைக்கும்பணியில்தங்களைஇணைத்துக்கொண்டவர்கள். இவர்களுடையபடைப்புகள்குறித்துபேசநிறையஇருக்கிறது.

நீங்கள்குறிப்பிடும்அன்றையஅறிஞர்களின்நூல்கள்எங்குகிடைக்கும்?

பலநூல்கள்அறிமுகமாகாதநிலையிலேயேஇருக்கின்றன. காரணம், அவைவெளியானகாலத்தில்இன்றுபோல்ஊடக,விளம்பரவசதிகள்இல்லை. சிலநூல்கள்இப்பொழுதுகிடைப்பதில்லை. பலநூல்கள்புதுச்சேரிபிரஞ்சுநிறுவனத்திலும், பிரான்ஸ்நூலகங்களிலும்இருக்கின்றன. அவற்றைமீண்டும்பதிப்பித்துபாதுகாக்கவேண்டியதுநம்கடமை.

தமிழகத்தில்மொழிபெயர்ப்புகளுக்குவரவேற்புஎப்படிஇருக்கிறது?
நல்லமொழிபெயர்ப்புகளுக்குஎங்கும்வரவேற்புஇருக்கும்.பலஇலக்கியஇதழ்கள்மொழிபெயர்ப்புகளைத்தொடர்ந்துவெளியிட்டுவருகின்றன.தமிழிலிருந்துபிரஞ்சுக்குமொழிபெயர்க்கபடும்படைப்புகள்Le trait d’union, la rencontre avec l’Indeபோன்றஇதழ்கள்வெளியிடுகின்றன.மேலும்வரவேற்புகிடைக்கும்படியானமொழிபெயர்புகள்அதிகஅளவில்வரவேண்டும்.



23.10.15

"ஒரு மொழியில் வெளிவரும் எல்லா படைப்புகளுக்கும் அடுத்தமொழியில் அதே வரவேற்புக் கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த படைப்பு ஏற்புடையதாக இருக்குமோ அதனை மொழிபெயர்க்க வேண்டும். நம் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு பிரான்ஸில் வாழும் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் இணைந்து 'chassecroise franceinde' என்னும் வலைப்பூ ஒன்றை பிரஞ்சு மொழியில் நடத்திவருகிறோம். இதில், கதை கவிதை தவிர, தமிழ்ப் படைப்புகள் குறித்த பிரஞ்சுக் கட்டுரைகளும், தமிழர்கள் எழுதும் பிரஞ்சுப் படைப்புகளும் இடம்பெறுகின்றன." - குமுதம் தீராநதி அக்.2014 நேர்காணலில் நண்பர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், புதுச்சேரிdiv dir="ltr" style="text-align: left;" trbidi="on">

6.9.15

எம் கெழுதகை நண்பர் பேராசிரியர் பொன். பத்மநாபன், காரைக்காலிலும் புதுச்சேரியிலும் என்னுடன் நெடுங்காலம் பணியாற்றியவர். கேடு வருங்கால் கைகழுவி உடல்நழுவும் நட்புகள் நிலவும் இந்த உலகத்தில், 1.பல்கலைக் கழகம், 2.துறை, 3.பணிவாழ்க்கை என்ற மூன்று நிலைகளிலும் ஆபத்து வந்தபோது கைகோத்து உடன்நின்று உதவிய செம்மல் இவர். பணிநிறைவுக்குப் பின் ‘அகத்தியமான தனிமை’ எனக்கு வேண்டும் என்று கருதி, ஒதுங்கி வாழ்ந்தவர். எங்கள் நண்பர் முனைவர் & முதல்வர் திரு ப. சுதந்திரம் Sudhanthiram Pachiappan அவர்கள், பொன். பத்மநாபனின் கைப்பேசி எண்ணைக் கேட்டபோது என்னிடம் அவர் எண் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான், காரைக்காலில் ஓரிரு பேராசிரியர்களை இது தொடர்பாகக் கேட்கிறேன் என்று தெரிய வந்தபோது, நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரிடம் வயணம் சொல்லி விடுத்தார். இப்பொழுது எங்கள் பேரன்பர் முனைவர் செல்வப்பெருமாள் கையில், இதனுடனுள்ள படங்கள் சுட்டும் ஐந்து நூல்களையும் தந்தனுப்பினார். நேற்றிரவு நூல்கள் என் கைக்குக் கிடைத்தன. இனிமேல்தான் வாசிக்கத் தொடங்கவே வேண்டும்.

8.8.15

இனிமையான எளிமையான தனித்தமிழ் எண்சீர் மண்டிலங்களால் தமிழ நம்பி ஐயா படைத்துள்ள 'விடுகதைப் பா நூறு', இவ்வகையில் தமிழில் முதனூல்!

2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]

12.7.15

புதுச்சேரி ஒரு புத்தக நகரம்

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பய்யர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)