6.5.24

பயன்?

எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ எழுதுகிறோம். எவ்வளவோ புத்தகங்கள் வெளியிடுகிறோம். சமூக வலைதளங்களில் பதிவுகள் பல பதிகிறோம். உண்மையாகவே உழைத்து தரவுகள் மிகுந்தவையாக பதியும் பதிவுகளுக்கு மதிப்பில்லை. வெற்று ஆரவாரம், சவடால், கொச்சை, தனிமனிதர் வழிபாடு, பிறந்த நாள், திருமண நாள் , இறப்பு தொடர்பான பதிவுகளுக்கு மட்டுமே பார்வைகள் அதிகம். முன்பெல்லாம் பெண்கள் பதிவிட்டால் அதற்கு அமோகமான ஆதரவு இருந்து வந்தது. இப்பொழுது அதுவும் குறைந்துவிட்டது. பொதுவாகவே வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் சிறந்தவற்றுக்கு இப்பொழுது உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிப்பது என்பது அறவே இல்லை. கூடுமானவரை பேச்சைக் குறைத்துக் கொண்டு சைகைகளிலேயே செயல்களை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாம் டிஜிட்டல் ஆகிவிட்டன.