12.11.13

கலைமாமணி முனைவர் எ.மு.இராஜன் தனது "சிலந்தி வலை" யில்

காந்தியின் கைத்தடி
1984
முதல்
சிலந்தி வலை 2013
வரை
31 தமிழ் நூல்கள்
Political Economy of Income Taxation in India 1997
முதல்
Learning Disabilities
(தொகுப்.)
2008
வரை
6 ஆங்கில நூல்கள்
“சிலந்திவலை”
துளிப்பாக்கள் 500, பக்கம்: 128 ரூ.80
எ.மு.ராஜன் (கலைமாமணி முனைவர்) நவம்பர் 2013.

பூட்டிய வீட்டில்
சிலந்தி வரைகிறது
ஓவியம் (3)

படிக்கும் காலத்தில் புரியவில்லை
இப்போது புரிகிறது
முதுமை (7)

பேசக்கற்றுக் கொடுத்த பெற்றோர்
பேசாமலிருக்கக் கற்றுக் கொடுக்கும்
பிள்ளைகள் (12)

தாள்களைத் தவிர்க்கிறோம்
தப்பித்துப் போகட்டும்
மரங்கள் (21)

இனிவரும் துளிகளில் நிறுத்தற்குறி - அடி பிரிப்பு:-

வீட்டுக்கு மேல்/வீடு, இன்னும் தெருவில், மக்கள் (48)
அடுத்ததைப் பிடிக்கும் முன், பிடித்ததை விட்டு விடாதீர்கள், குரங்குப் பிடி (77)
வகுப்பறையை விட, வெளியில் மகிழ்ச்சியாக, மாணவர்கள் (79)
கோடிக்கணக்கானோர் வருகை, ஆன்மீகப் பொருளாதாரம், ஐயப்பா சரணம் (122)
பழங்கால வாழ்க்கை, மீண்டும், மின்வெட்டு (184)
எறும்புகள் ஏமாந்தன, வாசலில், கோலம் (191)
இன்னும் இருட்டு, விடியவே இல்லை, இலங்கைத் தமிழர் (200)
கடவுளுக்குப் புரியும், தமிழிலும், மந்திரம் (252)
எல்லா முகத்தையும், பொறுத்துக் கொள்ளும், கண்ணாடி (256)
வாழ இடமில்லை, வானமே எல்லை (259)
புட்டிப் பால் எதற்கு, தாய்ப் பால் இருக்கிறது, தமிழ் (282)
கொலை செய்வதுதான் தர்மம், கெளரவர்களுக்கும் பொருந்தும், கீதை (290)
அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள், நடத்துகிறார்கள் தனியார் பள்ளிகள் (300)
எனக்கு வேண்டும் இலவசம், எனது வாக்கு, விலைக்கு (296)
முகத்துக்கு அழகு, மூடிக்கிடக்கும் வாய் (306)
பிரிப்பதால் வலிக்கிறது, கத்திரிக்கோல் (320)
(John Donne Compares Love to a pair of Scissors (Facebook: Calavady Passoupati)
ஆங்கிலத்தில், ஆண் எப்போதும், மேல் (Male) (321)
இருப்பதைக், காட்டு, வாழ்ந்து (322)
எல்லாம் இயந்திரமயம், இருந்தும் வேண்டும், விரல் நுனி (344)
உயர்த்திப் பிடித்தார், காந்தி, கைத்தடி (350)
பேருந்தில் நெரிசல், உரசுகின்றன, எருமைகள் (349)
போனது 100, சென்றது, 108. (374)
யாரென்று தெரியாத, எதிர் வீட்டுக்காரர், அடுக்குமாடி (383)
தானாடா விட்டாலும், தசை ஆடும், பட்டிக் காடு (392)
தாயும் தாரமும், இருதலைக் கொள்ளி, எறும்பாய் நான் (405)
இனித்தது கன்னத்தில், பேத்தியின், உதடுகள் (402)
என் பெயரைச் சொல்லி, அழைத்தாள் குழந்தையை, முன்னாள் காதலி (449)
பாலூட்டியபடியே, பசியாறினாள், தாய். (450)
உழைத்து ஓய்ந்த, பிய்ந்து போன செருப்பாய், அப்பா (455)
தவறு செய், திருத்திக் கொள், நீ மனிதன். (460)
ஆயா கடந்த காலம், ஆத்தா, நிகழ்காலம் (467)
பந்திக்கு, முந்தியதால், தொந்தி (492)
கண்ணனைப் போல், எட்டாவது பிள்ளை, எ.மு.ராஜன் (500)

1 comment:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

தலைமையுரையை, காலம் கருதி, சட்டைப்பையே தாங்கிற்று. இங்கே, நம் வெளியில் பதிகிறேன்.