3.12.13

முகநூலில் தேவமைந்தன் கவிதை 12/02/2013

முன்பனி, பின்பனியைத் தொட்டுஅணைக்கத் தாவும் பருவம்.
விரல்கள், வைகறைப் பனியில்
விறைத்துக் கொள்ளும் போதெல்லாம் உன் தீண்டுகை தொடங்கும் தொடரும்...
உடம்பை மீண்டும் உருவாக்கி உள்ளே
மூச்சை வெப்பாக்கி அள்ளைகள் விரிவாக்கி
குருதி வெதுவெதுப்பாக உன் நெஞ்சம்பற்றி, சாருமுன்நான்
தலைகீழ்த் திரும்ப.
ஐயோ! மீளவுமா பூமி?

- தேவமைந்தன்

No comments: