17.10.11

சோளக் கொல்லைப் பொம்மை!


சோளக் கொல்லைப் பொம்மை!
- ம.இலெனின் தங்கப்பா


சோளக் கொல்லைப் பொம்மை!
முறைக்குது பார் நம்மை.

ஆளைப் போல மிடுக்கு.
அட்டைக்கத்தி முடுக்கு.
தாளில் தங்க மினுக்கு.
தலை தான் கொஞ்சம் ஒடுக்கு.
காளி கோயில் பூதம் போலக்
காவல் காத்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

சட்டித்தலை மேலே
சவரி முடி ஒட்டிப்
பட்டை நாமம் தீட்டிப்
பல் இளித்துக் காட்டி
நெட்டி மாலை போட்டுக் கந்தல்
சட்டை மாட்டி விட்ட பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

ஓலையாலே நாக்கு,
ஒட்டு வைத்த மூக்கு,
போலி மீசை முறுக்கு,
புள்ளி குத்தி இருக்கு.
காலை மாலை இரவு பகல்
கண் விழித்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

வாயைப் பாரு சப்பை;
வைக்கோல் பொதி தொப்பை;
சாய மாலை காற்றில்
சலசலக்க ஆட்டிப்
பேயைப் போல இரவு நேரம்
பிள்ளைகளை மிரட்டும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

8 comments:

Neela.Panikkundran said...

vinmeen varaindha padam adhu.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

anRu.avar makhan thiru viNmeen pAndiyan kathaikaL thamizh achchithazhkaLilum valaiyaedukaLilum adikkadi varukinRana. vaasiyungkaL.
- Devamaindhan
KooRainaadu
23-1-2011

Anonymous said...

தங்கப்பா ஐயாவின் நூற்பட்டியல் தேவை. - ஆர்.கே.குமார், 12-பி, பூமார்க்கெட் தெரு, லங்கர்கானா,தேவாங்கப்பேட்டை, கோவை.641004.

Calavady said...

வானகப் பதிப்பகம்,
இலக்கம்: 7, பதினொன்றாம் குறுக்குத் தெரு,
ஒளவை நகர்,
இலாசுப்பேட்டை அஞ்சல்,
புதுச்சேரி - 605 008.

என்ற முகவரிக்கு எழுதிக் கேளுங்கள்.

Anonymous said...

I hope this collection of poems would be translated into English by Thangappa Aiyaa himself and published by Penguin for the benefit of the kids belonging to other regions.
- கொடைக்கானல்
http://ammaa.blogspot.com

நீல. பணிக்குன்றன் said...

உங்கள் வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவது தொல்லை. சுலபம் ஆக்கவும்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

அப்பெயரால்தாம் எரிதங்கள்(spam) வருகின்றன. எனவேதான் இவ்விறுக்கம். சிலர் தீமைகளை நுழைக்கிறார்கள்.

K.Muthu said...

Pani sonnar. puthagam padikka vaendum.