4.11.15

குமுதம் தீராநதி நேர்காணல்: நண்பர் முனைவர் சு.ஆ.வெ. நாயகர்

நேர்காணல்:
பிரஞ்சுமொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஈடுபாடு உங்களுக்கு எப்படி வந்தது?

புதுச்சேரிக்கும் பிரஞ்சுக்குமான தொடர்பு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.பலரைப்போல்நானும்+2 வரைபிரஞ்சு மொழியை விருப்பப் பாடமாக எடுத்து படித்தேன்.அந்தக்காலக்கட்டத்தில்சிறப்புவகுப்புகளுக்குசென்றுபயிலும்வாய்ப்புஎன்நண்பர்சுப்பிரமணிவாயிலாககிடைத்தது. பிரஞ்சுப்படைப்புகளுடனானதொடர்பு, அம்மொழியின்ஓசைநயம்என்னைஈர்த்துவிட்டன. பிறகு பிரஞ்சுமொழியில்இளங்கலை, முதுகலை பட்டம்முடித்தேன். பிரஞ்சு-தமிழ்வினைத்தொகைளைஒப்பாய்வுசெய்துபேராசிரியர்இரா. வெங்கட்டராமன்நெறியாள்கையில்இளம்முனைவர்பட்டம்பெற்றேன்.முனைவர்பட்டஆய்வுக்குசுவிட்சர்லாந்தைசேர்ந்தபிரஞ்சுஎழுத்தாளர்‘பிலேஸ்சாந்த்ரார்புதினங்களில்விலகித்தப்புதல்எனும்பொருள்கோள்’ தலைப்பில்பேராசிரியர்இரா.கிருஷ்ணமூர்த்தியின்நெறியாள்கையில்ஆய்வினைசெய்துமுடித்தேன்.

 நீங்கள் எப்படி மொழிபெயர்ப்புத்துறைக்குவந்தீர்கள்?

தொடக்கத்தில்பொழுதுபோக்காகவும்பின்னர்பயிற்சியாகவும்மொழிபெயர்ப்பினைச்செய்துவந்தேன். பிறகு, அதில்உள்ளசவால்களும், சுவாரசியங்களும்அப்பணியைச்செய்துமுடிக்கும்போதுகிடைக்கும்மனநிறைவும்என்னைத்தொடர்ந்துஇயக்கிவருகின்றன.

 பிரஞ்சு மொழிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.மொழிபெயர்ப்பிற்கு எத்தகைய படைப்புகளைத் தெரிவு செய்வீர்கள்? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.
என்னைக்கவர்ந்தஎந்தபடைப்பாகஇருந்தாலும், அதைநம்வாசகர்களிடம்அதேவனப்புடன்கொண்டுசெல்லமுடியுமாஎன்பதைமுதலில்எண்ணிப்பார்ப்பேன்.படிக்கும் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு பிரதியை புரிந்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லாமல் பார்த்து கொள்வேன். மொழிநடை ஒருபுறமிருக்க, பண்பாட்டுக் கூறுகள் இத்தெரிவில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வாசிப்பில் நெருடல்கள் இல்லாத கதைகளாகத் தெரிவு செய்வேன். எடுத்துக்காட்டாக நான் மொழிபெயர்த்த சில கதைகளைச் சொல்லலாம்.
செருப்பு ஜோடி ஒன்றை கணவன் மனைவியாக்கி புனையப்பட்ட “ஜோடிப் பொருத்தம்”, உயர்காவல் அதிகாரியின் இடதுகை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் சிக்கலை சுவையாக எடுத்துச் சொல்லும் “கலகம் செய்யும் இடதுகை”.
நெருங்கிய உறவினர் இல்லாத ஒருவர் மரணத்தை எதிர்பார்த்து தமக்குத்தாமே பல மலர்வளையங்களை வாங்கி, அவற்றில் கற்பனையான உறவுமுறைகளை எழுதிவைத்த சோகத்தை சொல்லும் “எங்கள் சிறந்த வாடிக்கையாளர்”. இக்கதைகளை எந்த மொழியில் கொண்டு சென்றாலும் வாசகருக்கு எளிதில் போய்ச்சேரும்.
சிறுகதைகளை பொருத்தவரையிலும் நான் படித்து ரசித்தவற்றை என் நண்பர்களோடும் பேராசிரியர்களோடும் பகிர்ந்து கொள்வேன். நான்அடிக்கடிசந்திக்கும்என்பேராசிரியர்கள்கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இலக்கியநண்பர்களானஎழுத்தாளர்கள்கி.ரா, பிரபஞ்சன், செயப்பிரகாசம்,பசுபதி,பஞ்சாங்கம்,நாகரத்தினம்கிருஷ்ணாபோன்றோரிடம்உரையாடும்போதுகதையின்உள்ளடக்கத்தைசொல்வேன்.மொழிபெயர்க்கஎண்ணியிருக்கும் கதை தமிழ் வாசகர்களை ஈர்க்குமா என்பதை தெரிந்துகொள்ள இது எனக்கு உதவிபுரிந்தது. இதே போன்ற கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேனே என்று யாராவது ஒருவர் சொன்னால் அவர் குறிப்பிடும் கதையை ஒப்பிட்டு பார்த்து நான் தேர்ந்தெடுத்துள்ள படைப்பில் கொஞ்சமாவதுபுதுமை இருந்தால் மட்டுமே மொழிபெயர்க்கத் தொடங்குவேன்.

 சில பண்பாட்டுக்கூறுகள் வாசகர்களுக்கு புரியாமல் போக வாய்ப்புண்டு. அத்தகைய நேரங்களில் எப்படி எதிர்கொள்வீர்கள்?
அதுபோன்ற சமயங்களில் ஒன்றிரண்டு அடிக்குறிப்புகள் தேவைப்படும். அவை அதிகமானால் மொழிபெயர்ப்பு பிரதிக்கு ஆய்வேட்டு முகம் வந்துவிடும். அவற்றை அறவே ஒதுக்கி விட்டாலும் முகம் மங்கலாக தெரியும். இதுபோன்ற இக்கட்டைத் தவிர்க்கவே மொழிபெயர்ப்புக்கான படைப்புகளைத் தெரிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
 ஒரு படைப்புக்கு ஒரே மொழி பெயர்ப்புதான் சாத்தியமா?
அப்படி சொல்லிவிட முடியாது. எப்படி ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும், அவரவர் பாணியில் விவரிக்கிறார்களோ, அப்படித்தான் இதுவும். ஒரே சம்பவத்தை, ஒரு செய்தியை உங்கள் அப்பாவிடம் ஒரு விதமாகவும், உங்கள் பேரனிடம் வேறு வழியிலும் விளக்குவதில்லையா.எண்ணங்களை வெளிப்படுத்துவதில்,ஒரே மொழிக்குள் இப்படி வேற்றுமைகள் இருக்கும்பொழுது இருமொழி தொடர்புடைய மொழி பெயர்ப்பு எனும் இந்த பரிவர்த்தனையில் நிச்சயமாக, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியமே. தவிர மொழி பெயர்ப்பாளனின் மொழிப்புலமை, அனுபவம், மொழிபெயர்ப்புக்காலம் எனப்பல அம்சங்கள் மொழியாக்கத்தைதீர்மானிக்கின்றன. எனவே, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியம் மட்டுமல்ல வரவேற்கத்தக்கதும் ஆகும்.
 இப்படி பல மொழி பெயர்ப்புகளைக் கொண்ட பிரெஞ்சு படைப்பு ஏதாவது இருக்கிறதா?
பலவற்றைச் சொல்லலாம். அண்மையில் என் பேராசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,மதாம்பொவாரி எனும் பிரஞ்சு புதினத்தின் ஐந்து ஆங்கில மொழி பெயர்ப்புகளைக் காட்டினார். அவற்றில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து Guillemin Fletcher வெளியிட்டுள்ள நூலினையும் கொடுத்தார். இந்த ஐந்து மொழி பெயர்ப்புகளைத் தவிர இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அதே படைப்புக்கு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. எனவே காலந்தோறும் மாறிவரும் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரே படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன.

 படைப்பு,மொழி பெயர்க்கப்படும் காலத்திற்கும்உருவான காலத்திற்குமான இடைவெளி அதிகமாக இருக்கும் போது ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பீர்கள்?
உண்மைதான், எந்தப் படைப்பாளரும் அன்றைய வாசகரை மனதில் வைத்தே தன் படைப்பினை உருவாக்குகிறார். அது எழுதப்பட்ட காலத்திற்கும், இன்றைய (மொழி பெயர்க்கப்படும்) காலத்திற்குமான இடைவெளி நீண்டிருந்தால், இன்றைய வாசகர் புரிந்துகொள்ளும் வகையில் மொழி நடையில் மொழி பெயர்ப்பினை மெருகேற்ற வேண்டி இருக்கும். நான் முன்பே சொன்னது போல, ஒரே மொழியை அறிந்தவரும் தன்னை அறியாமல் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுபோலவே மொழிபெயர்க்கப்படும் காலத்திற்கு ஏற்ப மொழியாக்க நடையும் மாறுகிறது.
 இதற்கு ஏதாவது சான்று கூறமுடியுமா?
ரஷ்ய படைப்புகளின் மொழிபெயர்ப்பைச் சொல்லலாம்.அண்மையில்சிலபடைப்புகள்நேரடியாகரஷ்யமொழியிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அன்றைய மொழிபெயர்ப்புகளை இப்போது வரும் மொழியாக்கப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது விளங்கும். தரமான இலக்கியப் படைப்புகள்பலஆண்டுகளுக்கு முன்பேமொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவற்றை மீண்டும் இன்றைய தமிழ் மொழிநடையில் வழங்குவதில் தவறில்லை.
 பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆங்கில வழியாகவே வந்துள்ளன. உங்களைப் போன்றோர் அம்மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வருகிறீர்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எந்த ஒரு பொருளையும் நேரடியாக, முதல் ஆளாக நுகர்பவரின் அனுபவத்திற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. அது கைமாறி இரண்டாவது, மூன்றாவது ஆளுக்குப் போகும்பொழுது நிச்சயமாக முதல் நபர் ருசித்த அதே சுவை,அவருக்குக்கிடைத்த அதே அனுபவம் கிட்ட வாய்ப்பில்லை. இங்கு முதல் நுகர்வாளர் மூலப்படைப்பின் வாசகர், அதாவது Native Speaker (படைப்பின் மொழியையே தாய் மொழியாக கொண்டவர்) இப்படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுது அவர் இரண்டாவது நுகர்வாளர் ஆகிறார். ஆங்கில வழியாக வரும்இந்த மொழிபெயர்ப்பு தமிழ் வாசகர்களுக்கானது அல்ல. ஆங்கில வாசகர்களை மனதில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் இயங்கியிருப்பார். எனவே மூன்றாவதுநுகர்வாளர் என்ற நிலையில் தமிழ் வாசகர்கள் முழுமையான வாசிப்பு அனுபவத்தை இழக்க நேரிடுகிறது

 விளக்கமாகக் கூற முடியுமா?
பிரஞ்சில் இருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்க்கும்பொழுது மொழி பெயர்ப்பாளருக்குச் சில வசதிகள் உள்ளன. பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் நீ, நீங்கள் போன்ற ஒருமை பன்மை வேற்றுமைகளை அறிந்து இச்சொல்லை மொழிபெயர்ப்பார். ஆனால் இந்த இரண்டு சொற்களுக்கும் you என்ற பொதுச் சொல்லே ஆங்கிலத்தில் உள்ளதால் ஆங்கிலம் வழியாக வரும் தமிழ் மொழிபெயர்ப்பில் மூலப்பிரதி ஆசிரியரின் நோக்கம் வெளிப்படாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. மொழி பெயர்ப்பாளரின் ஊகம், தெரிவு, அனுபவம் போன்றவையே இச்சொல்லின் தமிழ் வடிவத்தை முடிவுசெய்யும். இப்பிரச்சனை தமிழில் இருந்து பிரஞ்சுக்கு மொழி பெயர்க்கும்போதும் எழும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, நம்மிடம் உள்ள அவன், அவர், அவள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் பொழுது, ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மூலப்படைப்பின் எடுத்துரைப்பைக் கொண்டு வர மொழிபெயர்ப்பாளர் சில உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். பிரஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்ப்பவருக்குச் சில மரபுத்தொடர்களை மாற்ற வேண்டியிருக்காது.
சான்றாக,Il a un bras long, அவன் ஒரு பெரியகை, tu auras la fete உனக்கு கச்சேரி இருக்கு போன்ற சொற்றொடர்கள் பிரஞ்சிலும் அதே பொருளில் வழங்கப்படுவதால் மொழிபெயர்ப்பு எளிமையாகவும் இயல்பாகவும், சுவையாகவும் அமையும்.
மேலும், பெயர்களின் உச்சரிப்பில் பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் முறையாக செயல்படமுடியும்.
பெயர்களின் உச்சரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா?
கவனம் தேவை என்பது தான் என் கருத்து.
உதாரணமாக, சிலவர்ணனைகளில், ‘இப்படி இவன் எட்டப்பனாக மாறுவான் என்று யாராவது நினைத்திருக்கமுடியுமா?’ என்ற தொடரில் ‘எட்டப்பன்’ எனும் பெயர்எத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது விளங்கும். அரிச்சந்திரன் போலத்தான் பேசினான் என்ற உவமையிலும் இதே நிலை தான். பிரஞ்சில்,‘Harpagon’ அர்பாகோன் ’ போல் நடந்துகொண்டான் எனும் தொடரில் அர்பாகோன்என்பவன் மொலியேரின் நாடகமொன்றில் பாத்திரம் என்பதும்கருமி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருவதும் அறியாதவாசகர்களுக்கு அப்பெயர்எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, பெயர்களை-அவை எந்தநாட்டிலிருந்து வந்தாலும் - உரியமுறையில் பதிவுசெய்வது எழுத்தாளார்களின் கடமையாகிறது. சான்றாக நம் பெயர்களான மாலதியை ‘மலாதி’ (பிரஞ்சு மொழியில் நோய் எனும் பொருள் ) என்றும் சீத்தாபதியை சீதபேதி என்றும் உச்சரித்தால் பொறுத்துக்கொள்வோமா?மூலஆசிரியர்களின்பெயர்களையும்சரியாகஉச்சரிக்கமுயலவேண்டும்.தமிழில்கிடைக்கும்ஒலிச்சேர்க்கைகளைபயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அல்பெர்கமுய்,ழான்போல்சார்த்ர்,வொல்த்தேர்போன்றவர்களின்பெயர்கள்முறையாகதமிழில்வழங்கவேண்டும்.

 மொழி பெயர்ப்பாளருக்கு இருமொழிகளிலும் திறமைவேண்டும், இதைத்தவிர, நல்ல மொழிபெயர்பாளருக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன?
பன்மொழிப்புலமை மட்டுமே மொழிபெயர்ப்புக்கு உதவிட முடியாது. மொழிப் புலமை என்பது passport மட்டுமே. அடிப்படைத் தகுதி. முதல் படைப்புகளை மொழி பெயர்க்கும் பொழுது படைப்பு உருவான காலம், இடம் – நாடு கதை மாந்தர்களின் பண்பாட்டுக் கூறுகள் என எல்லாவற்றையும் அறிந்திருப்பது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள சொற்களான கட்டுக்கழித்தி, ஒத்து ஊதுதல், ஐஸ்வைத்தல், பன்னீர் தெளித்தல் போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழுக்கே உரிய இச்சொற்றொடர்களைப் பிரஞ்சில் புரிய வைக்க இவற்றுக்கு இணையான பதிலிகளைத்(Equalivalents) தேடியாக வேண்டும். அதேசமயம், அகராதியைமட்டுமேநம்பிசெய்யப்படும்எந்திரமொழிபெயர்ப்பைஏற்றுக்கொள்ளமுடியாது. Spirit is willing but the flesh is weakஎன்பதைVodka is strong but the meat is softஎன்றரஷ்யமொழிபெயர்ப்பைசுட்டிஇதனைவிளக்குவதுண்டு.
ஆனால் சில நேரங்களில், அயல் மொழிகளில் உள்ள மரபுத் தொடரை அப்படியே இறக்குமதி செய்வதையும் பார்க்க முடிகிறது. அவை புதிய வரவாக நம் மொழியில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, சிவப்புக்கம்பள வரவேற்பு (Redcarpet Welcome).அதேபோல், நம்மொழியில்உள்ளபொருள்பொதிந்தமரபுத்தொடர்கள்சிலவற்றைஅங்குகொண்டுசெல்லலாம். இவ்விஷயத்தில் மொழிபெயர்ப்பின் இலக்கு என்ன, அது யாருக்கானது என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்ய இயலும்.
 பண்பாட்டுக்கூறுகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
ஒரு மொழி சார்ந்த பண்பாட்டின் முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் மக்களின் மதம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என பல விசயங்களை உள்ளடக்கிய மொழி அறிவு தேவைப் படுகிறது. இவை தவிர மொழியின் புற வெளிப்பாடான உடல் அசைவுகளும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, பிரஞ்சுக் கதை மாந்தரோடு, தன் ஆள்காட்டி விரலை வலதுகண்ணுக்கு அடியில் வைத்து ஏளனமாக மற்றவரை பார்த்தார் என்றால் என்னை நம்பச் சொல்கிறாயா என்று பொருள் . இதை நேரடியாக மொழிமாற்றம் செய்தால் ‘என் கண்’ என்றுதான் வரும், ஆனால் பிரெஞ்சுப் பண்பாடுகளை அறிந்தவர் மொழிபெயர்க்கும் பொழுது, நம் தமிழ் மொழியில் இதற்கு ஈடான எனக்கு ‘காது குத்தியாகி விட்டது’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவார்.

 மொழி பெயர்ப்பில் அடிக்குறிப்புகள் தேவையா?
இயன்ற வரையில் அடிக்குறிப்புகளைத் தவிர்க்கவே நான் விரும்புவேன். காரணம் அவை வாசிப்புக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு. இது தொடர்பாகநொயெல்கொவர்ட் (NOEL COWARD) குறிப்பிடுவதைப் போல் “மாடியில் முதலிரவு நடக்கும் போது, அழைப்பு மணி ஓசையைப் போன்றது அடிக்குறிப்புகள்”. கட்டாயம் தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் சுருக்கமாகத் தரலாம்.இல்லையென்றால் படைப்பின் இறுதியில் தரலாம்.அடிக்குறிப்புகளைத் தவிர்த்து,வாசகருக்குவிளங்கும்வகையில்பிரதிக்குள்ளேயேசொல்லமுடிந்தால்மிகவும்நல்லது.
 மொழிபெயர்ப்பின் தேவைகுறித்துச் சொல்லுங்கள்.
இங்கே ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும், மொழிபெயர்ப்பின் உதவியால் பல எழுத்தாளர்களின் படைப்புகள் புகழ் அடைந்துள்ளன. சான்றாக, லூயிலாபோர்க் (Louis Laforgue) எனும் பிரஞ்சுகவிஞர் தம்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருந்தார். இவரது கவிதைகளைத்தான் டி.எஸ்.எலியட் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பிரஞ்சு வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படாத, கெளரவிக்கப்படாத இக்கவிஞரை மொழி பெயர்ப்புதான் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. இதேபோல் எட்கர் அலன்போ ஆங்கிலப் படைப்புகளை பிரஞ்சுக் கவிஞர்களான பொதலேர், மலார்மே ஆகியோர் மொழிபெயர்த்தார்கள்பொதலேரின் மொழியாக்கம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது. இவரது “The Purloined Letter” மறைந்து போன கடிதம் எனும் சிறு கதையைத்தான் புகழ் பெற்ற பிரஞ்சுச் சிந்தனையாளர் ஷாக் லக்கான் அதிகமாகக் கையாள்வார்.எனவே, மொழிபெயர்ப்பின் உதவியால் இருமொழிகளின் இலக்கியக்களமும் விரிவடைகின்றன. புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன என்பதும் விளங்குகிறது.
 நமது சங்ககாலச் செல்வமான குறுந்தொகையை பிரெஞ்சு மொழியில்பெயர்த்துள்ளீர்கள். அந்தமொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
எனக்கு மன நிறைவைத்தந்த பணிகளில் ஒன்றாக இந்த மொழிபெயர்ப்பைக் கருதுகிறேன். செம்மொழி தமிழ் உயராய்வு மையத்தின் ஆய்வு திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு விரைவில் நூல் வடிவம் பெற உள்ளது. மூலப்பாடலின் ஒலி பெயர்ப்பு, துறை, கூற்று, பாடல் ஆசிரியரின் பெயர் ஆகிய தகவல்களுடன் பாடல் வரிகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்துள்ளேன். மேலும், பாடலில் இடம்பெற்றுள்ள மலர்கள் தாவரங்கள் இவற்றின் பெயர்களை வித்தியாசமான எழுத்துருவில் தந்து அவற்றுக்கான விளக்கங்களையும் அடிக்குறிப்புகளாக இணைத்துள்ளேன். குறுந்தொகை 401 பாடல்களிலும் உள்ள மலர்களின் படங்களை வண்ணத்தில் நூலின் இறுதியில் கொடுத்துள்ளேன். பாடல்களில் உள்ள உவமைகளில் கையாளப் பெற்றுள்ள இப்பூக்களை வண்ணத்தில் பார்க்கும் பிரெஞ்சு வாசர்கர்கள் குறிப்பிட்ட பாடலின் ஆழத்தையும், அழகையும் எளிதாக சுவைக்க முடியும் இது முழுக்க முழுக்க பிரெஞ்சு வாசகர்களுக்கான நூல் என்பதால் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள தேவையான தகவல்கள் அடங்கிய முன்னுரையை நூலின் முகப்பில் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக, வேலன் வெறியாட்டு, மடலேறுதல், பசலை, போன்ற சங்க இலக்கியக்கூறுகளை பிரஞ்சு வாசகர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது
 இந்த மொழிப் பெயர்ப்பைப் பிரெஞ்சு மொழிக்கு கொண்டு செல்ல பொழிப்புரைகள் எந்த அளவுக்கு உதவி செய்தன?.
எனக்குப் பேருதவியாக இருந்தது உ.வே.சாவின் பொழிப்புரைதான். பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், ராகவஐயங்கார் ஆகிய பெருமக்களின் பொழிப்புரைகளோடு பல நூல்கள் துணை நின்றன. இப்பணியில்ஈடுபட்டிருந்தபோது, என்னைக்கடந்துசென்றதமிழாசிரியர்யாரும்குறுந்தொகைத்தொடர்பானஏதாவதுஒருசந்தேகத்தைதீர்த்திருப்பார்.இலெனின்தங்கப்பாமுதல்குறுந்தொகைஆ.மணிவரை (நீண்டபட்டியல்)பலதமிழ்ப்பேராசிரியர்கள்எனக்குதேவையானவிளக்கங்களைதந்துஉதவினார்கள்.
 அண்மையில் செம்மொழி நிறுவனத்தில் குறள் பீடம் பரிசு பெற்ற பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ அவர்களைச் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கு முன்னோடியாக சொல்ல வேண்டும். பரிபாடலை பிரான்சுவா குரோ அவர்கள் 1968 ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளார். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்தீர்களா? படித்து விட்டு பாராட்டினார். சில பாடல் வரிகளில் மொழி பெயர்ப்பை மெருகேற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். நூல் வடிவம் பெறும் பொழுது, நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்.
 பிரெஞ்சு வாசகர்களிடம் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு வரவேற்பு உள்ளதா?
பிரஞ்சு வாசகர்கள்நேரடியாக மொழிபெயர்க்கப்படும் படைப்புகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியின் வழியாகவோ மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் பிரெஞ்சு வாசர்களை அவ்வளவாக ஈர்ப்பதில்லை.
 சிறந்த மொழி பெயர்ப்பு என்பது எது?
மூலத்திலிருந்து விலகிச்செல்லாத மொழிபெயர்ப்பு சிறந்தது. உண்மைதான் ஆனால் வாசகனிடம் இருந்தும் விலகிசெல்லாததாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். பிரஞ்சுமொழியில் படித்தவாசகனுக்கு கிடைத்த வாசிப்பு அனுபவத்திற்கு நெருக்கமாக மொழிபெயர்ப்புப் பிரதியைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குத் தர முடிந்தால் அது சிறந்த மொழிபெயர்ப்புதான். தமிழ் வாசகரையும் அகராதியைத் தேடும்படி வைத்து விடக்கூடாது.
 மொழிபெயர்ப்புகளுக்கான தமிழ்ச்சூழல் எப்படியிருக்கிறது?மொழி பெயர்ப்புக்குப் போதிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா ?
வேண்டிய அளவுக்கு நேரடிமொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை தமிழில் இல்லை என்பது உண்மைதான். இத்துறையில் ஏற்படும் தேக்க நிலைக்குப்போதிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதுதான்முக்கியமானகாரணம்.பிரெஞ்சுப்படைப்புகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய பிரஞ்சு அரசின் தூதரகம் பொருளுதவி செய்துவருகிறது. இதேபோல் நம் இலக்கியப் படைப்புகளைப் பிரஞ்சு மொழிக்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். சாகித்திய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்திய மொழிகள் எனும் எல்லையை விரிவாக்கி உலக மொழிகளில் நம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தால் நல்லது.
 அயல்மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் புதிய வகையான வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது. இதைத் தவிர இத்தகைய படைப்புகளால் வேறு ஏதாவது பயன் உள்ளதா?
தமிழ்ப் படைப்புகளைத் தவிர ஏனைய மொழிகளில் உள்ள தரமான இலக்கியங்களை மொழி தெரியாத காரணத்தாலேயே வாசிக்க இயலாத நிலையைப் போக்கும் மகத்தான பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. படைப்பாளர்களும் மற்ற மொழிகளில் உள்ள புதிய சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள மொழியாக்கங்கள் உதவுகின்றன. பிரஞ்சு இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக வாசகர்களின் மத்தியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. கல்கி, புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் வரை பிரஞ்சு புதினங்களையும் கதைகளையும் மொழிபெயர்ப்பு வாயிலாகப் பலரும் வாசித்து வருவதை அறிகிறோம். இன்றைய தமிழ் இலக்கிய இதழ்களில் பல பிரஞ்சுப் படைப்புகள் குறித்த விவாதங்களும் கட்டுரைகளும் வருவதைக் காண முடிவதே இதற்குச் சான்று.
 மொழி பெயர்ப்பாளர்,படைப்பாளராகவும் இருக்க வேண்டுமா?
உங்கள் கேள்வியில் மொழி பெயர்ப்பாளர் படைப்பாளராக இருக்க முடியாது எனும் தொனி வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளரும் ஒரு வகையில் படைப்பாளர்தான் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். படைப்பாற்றல் இல்லாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு வெறுமனே சுவை, சத்து எதுவுமில்லாத நகலாகத்தான் இருக்கமுடியும். கவிதை மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரைமொழிபெயர்ப்பாளர் கவிஞராகவும் இருந்தால் கவிதை நடை இயல்பாக இருக்கும். அதே வேளையில் ஆர்வ மிகுதியில், தன் வரையறையைக் கடந்து, பொறுப்பை மறந்து மூலக் கவிதையின் சாயலில் தன் சொந்தக் கவிதையை எழுதிவிட நேரும் ஆபத்தும் உண்டு. அப்படிக்கிடைக்கும்கவிதைநன்றாகஅமைந்தாலும், அத்தகைய மொழி பெயர்ப்பைத் தழுவல் என்று தான் அழைக்க முடியும்.
ஸ்டெபான்மலார்மேஎனும் 19ஆம் நூற்றாண்டின்புகழ்பெற்ற பிரஞ்சுக்கவிஞர்,எட்கர் அலன்போவின்ஆங்கிலகவிதைகளைமொழிபெயர்த்தார். ஹான்ரிபரிசோஎன்றவிமர்சகர்மலார்மேசெய்தமொழிபெயர்ப்பின்தவறுகளைபோதியஆதாரங்களோடுசுட்டிக்காட்டுகிறார். மலார்மேசெய்தமொழிபெயர்ப்பைஅப்பொழுதுயாரும்சந்தேகித்திருக்கமுடியாது. தவறுநேர்ந்தால், படைப்பாளராகஇருந்தாலும்விமர்சனத்துக்குள்ளாகநேரும்என்பதைமொழிபெயர்ப்பாளர்கள்கவனத்தில்கொள்ளவேண்டும்.
 மொழிபெயர்ப்பாளர், வாசகர் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
ஓர் இலக்கியப் படைப்பை சாதாரண வாசகர் வாசிப்பதற்கும், ஒரு விமர்சகரோ அல்லது ஒரு திரைப்பட இயக்குநரோ வாசிப்பதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. இதே போல் மொழி பெயர்ப்பாளர் ஒரு படைப்பை வாசிக்கும்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடு தேவைப்படுகிறது. காரணம் இவன் இப்பிரதியை மீண்டும் ஒருமுறை படைப்பதற்காக(Recreation) வாசகருக்கு எனவே இவரது பொறுப்பும் கூடுகிறது. மொழி பெயர்ப்பாளான் படைப்பாளனாகவும் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இங்கு மேலும் விளக்கம் கிடைக்கிறது. அதாவது படைப்பாற்றல் இருந்தால்தான் தன்வாசிப்பு அனுபவத்தைவேற்றுமொழியில்வாசகர்களுக்குபரிமாற முடியும்

மூலப் பிரதிக்கு மொழிபெயர்ப்பாளர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?
எந்த மொழி பெயர்ப்பாளரும் ஆசிரியரை மிஞ்சவும் கூடாது விலகிச் செல்லவும் கூடாது. மூல ஆசிரியர் நம்முன் இல்லாவிட்டாலும் நம்மை நம்பி அவரது படைப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்து மொழிபெயர்ப்பாளர் இயங்க வேண்டும்; எப்படி ஒரு மருத்துவரை, வழக்கறிஞரை, ஆசிரியரை நம்புகிறோமோ அப்படித்தான்மொழிபெயர்ப்பாளரையும் நம்புகிறோம்.எனவே, அவரும் தமக்குள்ள கடமையை உணர்ந்து மூலப்பிரதிக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் அடிமையாக இருக்கத் தேவையில்லை. போல்ரிக்கேர் (PAULRICOEUR 1913 -2005) எனும் பிரஞ்சு தத்துவ அறிஞர், தனது “SUR LA TRADUCTION” என்ற நூலில் மொழிபெயர்ப்பாளரின் பணி குறித்த சில விளக்கங்களை தருகிறார் வாசகன் மூல ஆசிரியரிடமும் மூல ஆசிரியரை வாசகனிடமும் அழைத்து வர வேண்டும். இதனைமொழி விருந்தோம்பல்(L’hospitalitélinguistique-LINGUISTIC HOSPITALITY) என்கிறார்.இரண்டு பேரிடமும் வேலை செய்யும் சேவகனைப் போன்ற நிலையில் மொழிபெயர்ப்பாளர் இருக்கிறார். அவர் இருவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். எனவே மூல ஆசிரியரிடம் நேர்மையாகவும், வாசகரிடம் பரிவோடும் அணுகவேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும். ஆகவே எந்த இலக்கிய வகைமையாக இருந்தாலும் தன் எல்லைக்குள் இயங்கத் தெரிந்தவராக மொழி பெயர்ப்பாளர் இருக்க வேண்டும்.
 மூலப் பிரதியின் நடை, மொழி பெயர்ப்பிலும் எதிரொலிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதே அது முற்றிலும் சாத்தியமா?
ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் பொழுது மூல ஆசிரியரின் நடையைத் தான் மொழிபெயர்ப்பாளர் பின்பற்ற முயல்வார் என்றாலும் சில நேரங்களில் தன்னை அறியாமல் மொழிபெயர்ப்பாளரின் நடை மொழியாக்கப் பிரதிகளில் தலை நீட்டி விடும். பேச்சுமொழியில் வர்ணனை, உரையாடல் போன்றவற்றில் இந்தப்போக்கு அதிகமாக வெளிப்படும். எந்த வட்டார வழக்கையும் சாராத (குறிப்பாக மொழிபெயர்ப்பாளரின் சொந்த பேச்சு மொழி) பொதுவான தமிழில் (Standard Tamil) மொழிபெயர்ப்பது நல்லது. மொழி பெயர்ப்பு நடையைப் பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மூல ஆசிரியரை மொழிபெயர்ப்பின் பிரதியில் பேச வைக்க வேண்டும்.
தமிழில் உள்ள கதை கவிதை உள்ளிட்ட கலை இலக்கியத்துறை பிரெஞ்சு மொழி சார்ந்ததளத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறதா? அதே போல பிரெஞ்சில் உள்ள கதை கவிதைஉள்ளிட்ட கலை இலக்கியத்துறை தமிழ் மொழி சார்ந்த தளத்திற்கு ஏற்புடையதாகஇருக்கிறதா? ஏனெனில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றைமொழியாக்கம் செய்யும் போக்கு, அண்மைக்காலங்களில் இணையதளங்களின் தகவல்தொழில்நுட்பம்வளர்ந்த பிறகு அதிகமாகிக் கொண்டிருக்கிறது இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒருமொழியில்வெளிவரும்எல்லாபடைப்புகளுக்கும்அடுத்தமொழியில்அதேவரவேற்புகிட்டும்என்றுஎதிர்பார்க்கமுடியாது. எந்தபடைப்புஏற்புடையதாகஇருக்குமோஅதனைமொழிபெயர்க்கவேண்டும். நம்இலக்கியபடைப்புகளைஅறிமுகம்செய்யும்நோக்கத்தோடுபிரான்ஸில்வாழும்நண்பர்நாகரத்தினம்கிருஷ்ணாவுடன்இணைந்து “chassecroisefranceinde’ எனும்வலைப்பூஒன்றைபிரஞ்சு மொழியில்நடத்திவருகிறோம்.இதில், கதை, கவிதைதவிரதமிழ்ப்படைப்புகள்குறித்தபிரஞ்சுக்கட்டுரைகளும், தமிழர்கள்எழுதும்பிரஞ்சுப்படைப்புகளும்இடம்பெறகின்றன.


அதிநவீனப் போக்குகளுக்கெல்லாம் முன்னோடி பிரெஞ்சு மொழி இது.பின்நவீனத்துவப் போக்குக்கு முன்பே புதிய அலை என்ற உலகப் புகழ் பெற்ற நவீனகலை இலக்கிய வடிவத்தைத் தோற்றுவித்த மொழி இது. எழுத்தில் அலென்ரோப்கிரியேவிலிருந்து ஜார்ஜ் பெரக் வரை நவீன வடிவத்தை உருவாக்கிக்கொண்டேயிருந்தார்கள். தற்கால எழுத்தாளர்களில் அதுபோன்ற ஒரு போக்குஉருவாகிக் கொண்டிருக்கிறதா?

அப்படிக்குறிப்பிட்டுஓர்இலக்கியவகைமையைசொல்லிவிடமுடியாது.ஆனால், 21-ஆம்நூற்றாண்டின்தொடக்கத்தில், மாயஎதார்த்தவாதம்எனும்இலக்கியக்கோட்பாட்டைமுன்வைத்துசிலஎழுத்தாளர்கள்தங்கள்படைப்புகளைஅளித்தனர்.மரிஎந்தியாயே, வெரோனிக்ஓவால்தேபோன்றோர்இவ்வகைமையைச்சார்ந்தோர்.செர்ழ்துப்ரோவஸ்கிதன்புனைவுஎனும்புதுவகைஎழுத்தை 1977-இல்அறிமுகம்செய்தார்.ஆனிஎர்னோ,அலிஸ்பெர்னேபோன்றஎழுத்தாளர்கள்இவ்வகைப்படைப்புகளைவழங்கினார்கள்.
இலக்கியத் திறனாய்வு உலகில் பல புதிய போக்குகள் தோன்றியுள்ளன. அமைப்பியல்(ஸ்ட்ரக்சுரலிசம்) மார்க்சியவாதம், உளவியல்வாதம், கட்டுடைப்புவாதம் போன்றவை இவற்றுள் அடங்கும். இக்கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியவர்களில் ரொலான்ட் பார்த் (1915-1980), குலொது லெவி ஸ்த்ரோஸ் (1908-2009),கஸ்தோன் ப்ஷ்லார்; (1884-1962), லுயிசியன் கோல்ட் மான் (1913-1970), லூயி அல்துசார் (1918-1990), ழாக் தெரிதா (1930-2004), ழாக் லக்கான் (1901-1981) ஆகியோரைச் சுட்டலாம்.
இவர்களைத்தவிரபிரான்சிற்குவெளியேமரோக்கா, துனீசியா, அல்ஜீரியாபோன்றபகுதிகளில்வாழும்அமாதுகுருமா, தாகர்பென்ஜெலூன், அமீன்மலூப், அசியாஜெபார்போன்றஎழுத்தாளர்களும்கவனிக்கத்தக்கவர்களாகஇருந்துவருகின்றனர்.
அதிகம்விற்பனையாகும்நூல்களின்அடிப்படையில், இன்றையபிரஞ்சுவாசகரின்ரசனையைஅளவிடமுடியும்என்றால், அப்பட்டியலில்கியோம்முய்சோ, மார்க்லெவி,கத்தெரின்பான்கொல், மிஷெல்ஊல்பெக்,ழீல்லெகார்தினியே, பிரான்சுவாஸ்புர்தன், செபாஸ்த்தியன் ழப்ரிசோ, அன்னா கவால்தா, அமெலி நொதொம்ப்எனப்பலர்உள்ளனர்.

பிரெஞ்சு மொழி தவிர ஆங்கில மொழியாக்கமும் செய்கிறீர்கள். இதில் எதுஉங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது? இந்த வேறுபாட்டை எப்படிஉணர்கிறீர்கள்?
நான்அதிகமாகமொழிபெயர்ப்பதுதமிழ்,பிரஞ்சுதான்என்றாலும், என்னைமுதன்முதலில்மொழிபெயர்க்கஊக்கமளித்தஎன்ஆங்கிலப்பேராசிரியர்ராஜாஅவர்கள்Transfireஎனும்இதழுக்குஆசிரியரானபின்அவரதுஊக்கத்தால், ஆங்கில மொழியாக்கமும்செய்யத்தொடங்கினேன். ஆங்கிலத்திலிருந்துதமிழாக்கமும்செய்வதால்ஒருவகையில்என்ஆங்கிலமொழித்தொடர்புதொடர்வதற்குவழிசெய்கிறது.
பிரெஞ்சு கவிதைகள் மற்றும் அய்க்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்கிறீர்கள்
அந்த அனுபவம்?

ராபர்ட் ப்ராஸ்ட் சொல்வதைப் போல், “Poetry is what gets lost in translation”. கவிதையின் மொழிபெயர்ப்பில் வடிவம், பொருள், ஓசைநயம் என பல அம்சங்களில், சிக்கல் ஏற்படும்.
எனவே, எளிமையாகவும்செறிவாகவும்உள்ளகவிதைகளையேதெரிவுசெய்துமொழிபெயர்த்துள்ளேன்.வெரொனிக்தாட்ஜோ, அமாதுஅம்பாத்தேபா, சால்மாகர்மாதி, மொரீஸ்கர்மேல், பிராசான்ஸ்,ப்ரேவேர்எனபலரின்கவிதைகளைமொழியாக்கம்செய்துள்ளேன். தமியன்கப்ரியெல்ஸ்என்பவரின்ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம்செய்துள்ளேன். அவரதுஹைக்கூ கவிதைகளின்தொகுப்புஒன்றைகொண்டுவரும்எண்ணமும்உள்ளது. சுருக்கமாகவும், சுவையாகவும்உள்ளதால்கவிதைகளைபுரிந்துகொள்வதில்புரியவைப்பதில்சிக்கலில்லை.தமிழிலிருந்தும்பஞ்சாங்கம், சீனுதமிழ்மணிஉள்ளிட்டவர்களின்கவிதைகளைமொழிபெயர்த்துள்ளேன்
“தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகவும் பழமையானது. அதுவே முதன்மொழியாயும் இருக்கலாமென நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரஞ்சுக்காரர் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது ஒரு பெருங்குறையே. தமிழர்களின் வாழ்க்கை நலன்களைப் பிரஞ்சுக்காரர் அப்பொழுதே தெரிந்துகொண்டிருக்கலாம். அப்படித்தெரிந்து கொள்ளாத ஒரு பெருந்தவற்றை அவர்கள்நெடுங்காலம் வரை செய்துவிட்டார்கள்.” என்று பிரஞ்சுமொழிஅறிஞர்பியர்மேய்ல் 1911-1963 கூறுகிறார்.பிரஞ்சும்தமிழும்அறிந்தவர்கள்நிறைந்திருந்தகாலகட்டத்தில்புதுச்சேரியில்அதிகமாக மொழிபெயர்ப்புகள் வந்திருக்கவேண்டுமே?
புதுச்சேரியில்பிரஞ்சுஆட்சிநடைபெற்றபோது, தமிழ்பிரஞ்சுஇலக்கியப்பணியாகமொழிபெயர்ப்புகள், நூலாக்கங்கள்ஓரளவுநடைபெற்றன.ஞானுதியாகு, மரியதாசுப்பிள்ளை, சவராயலுநாயகர், தேசிகன்பிள்ளை,எதுவார்அரியேல்,ழூலியன்வேன்சோன், அதாம், பரஞ்சோதிரொலன், துரைசாமிப்பிள்ளை, காரவேலன், காரைசிபி, வேலாயுதனார், அடுத்ததலைமுறையில், ழான்பிலியோசா,பிரான்சுவாகுரோ, பட்டாபிராமன், தேசிகன், வாணிதாசன், அலேன்தணியேலு, தாவிதன்னுசாமி, முருகேசன், ஞானசம்பந்தன்,துரைசாமிநாயக்கர், லெயோன்ஸ்கதலீஸ்,மதனகல்யாணி, மதனகோபாலன், கிருஷ்ணமூர்த்தி, ராசகோபாலன், வெங்கடேசன்,வைத்தி,கிருஷ்ணசாமி, ஸ்ரீராம், வெங்கட்டராமன், மரி பியர்ஒகுய்ஸ்தேன், பக்தா,பன்னீர்செல்வம், ஜெயராஜ்டேனியல், திருமுருகன்ஆகியோரும்குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், பிரான்சில்வாழும்ஒர்சேகோபாலகிஷ்ணன், நாகரத்தினம்கிருஷ்ணா, முடியப்பநாதன், அப்பாசாமிமுருகையன், மொரே, போல்மிரியல், எலிசபத்சேதுபதி, ழான்லுயிக் ஷெவியார், முத்துக்குமாரன்சங்கிலி, கீதா,சண்முகசுந்தரம், நாகராஜன்போன்றோர்மொழிப்பாலம்அமைக்கும்பணியில்தங்களைஇணைத்துக்கொண்டவர்கள். இவர்களுடையபடைப்புகள்குறித்துபேசநிறையஇருக்கிறது.

நீங்கள்குறிப்பிடும்அன்றையஅறிஞர்களின்நூல்கள்எங்குகிடைக்கும்?

பலநூல்கள்அறிமுகமாகாதநிலையிலேயேஇருக்கின்றன. காரணம், அவைவெளியானகாலத்தில்இன்றுபோல்ஊடக,விளம்பரவசதிகள்இல்லை. சிலநூல்கள்இப்பொழுதுகிடைப்பதில்லை. பலநூல்கள்புதுச்சேரிபிரஞ்சுநிறுவனத்திலும், பிரான்ஸ்நூலகங்களிலும்இருக்கின்றன. அவற்றைமீண்டும்பதிப்பித்துபாதுகாக்கவேண்டியதுநம்கடமை.

தமிழகத்தில்மொழிபெயர்ப்புகளுக்குவரவேற்புஎப்படிஇருக்கிறது?
நல்லமொழிபெயர்ப்புகளுக்குஎங்கும்வரவேற்புஇருக்கும்.பலஇலக்கியஇதழ்கள்மொழிபெயர்ப்புகளைத்தொடர்ந்துவெளியிட்டுவருகின்றன.தமிழிலிருந்துபிரஞ்சுக்குமொழிபெயர்க்கபடும்படைப்புகள்Le trait d’union, la rencontre avec l’Indeபோன்றஇதழ்கள்வெளியிடுகின்றன.மேலும்வரவேற்புகிடைக்கும்படியானமொழிபெயர்புகள்அதிகஅளவில்வரவேண்டும்.



No comments: