27.10.06

நட்புக்குரிய பூக்களுக்கு...... - தேவமைந்தன்

நட்புக்குரியீர்!

நீங்கள் -

எதன் வெளிப்பாடுகள்?

எதன் நோக்கங்கள்?

ஏதோ தோன்றி

ஏனோ மறையும்

இருத்தல்களும் போதல்களுமா

உங்கள் வாழ்க்கை?

பொருளற்றது என்று

புடவியிலெதுவும் எங்கும்

இல்லவே இல்லை.

பொருளற்றது! அது அப்படித்தான்!!

என்று சொல்லி விடுதல்

மிகவும் எளிது. ஆனால்

உங்களின் இருத்தல் எவரையும்

உறுத்தாதது.

எங்களின் இருத்தலில் நீங்கள்

உடன் உறைபவர்கள்.

ஆகவே நீங்கள் வாழ்க,

ஒருபகல், ஓரிரவுப்

பொழுதேனும்……

(1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)

No comments: